கவிதை
என் மனமே …
எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே
அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே
நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே
பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்
நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே
தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ
நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ