குறளோடு உறவாடு!

வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! – குறள்
வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்!
தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! –
தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!