எடுப்பு
குறளோடு உறவாடு நெஞ்சே! – திருக்
குறளோடு உறவாடு நெஞ்சே!
———————————————————————– (குறளோடு)
தொடுப்பு
அறத்தோடும் பொருளோடும் இன்பத்தோடும் கொஞ்சும் – நல்
அன்போடும் பண்போடும் அருளோடும் விஞ்சும்!
———————————————————————– (குறளோடு)
முடிப்பு
நலமோங்கும் வாழ்வியலை நன்றாகப் பேசும்! – குறள்
நன்னெறியாம் ஒழுக்கத்தை நமக்கள்ளி வீசும்!
தலைவாழை கல்விதனை மகிழ்வோடு கூறும்! – குறள்
மாண்புறுமாம் ஈகைகுணம் வளரவுளம் சேரும்!
———————————————————————– (குறளோடு)
வாய்குளிர இன்சொற்கள் மலரவழி சொல்லும்! – குறள்
வளமோங்கும் நாடாக வகையறிந்து செல்லும்!
தூய்மையொடு ஆள்வினையை தொடர்கவெனத் துள்ளும்! –
தோதுறவே காலமதை அறியமுறை விள்ளும்!
———————————————————————– (குறளோடு)
உயர்ந்தகுடி இலக்கணத்தை குடிமையிலே காட்டும்! – குறள்
உலகோர்க்கு மனமோன்றே உயிரெனவே ஊட்டும்!
அயர்ந்தவரின் பிறமனையை நயப்பவரை ஓட்டும்! குறள்
அடியாள்கள் அனைவரையும் சிறையில்தள்ளிப் பூட்டு!
———————————————————————– (குறளோடு)