ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.
ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?
ஊர் வாயை மூடுவதற்காய்
ஊமையானார்கள் பெற்றவர்கள்.
ஊசியும் நூலுமாய்
ஊசலாடுதே இவர்கள் வாழ்வு.
ஏட்டிலே படிப்பதற்காய்
ஏணியாய் இருந்தார்கள்
ஏழ்மையை காட்டாது
ஏரோபிளேனில் பறக்க வைத்தனர்.
ஆசியை பெறுவதற்காய்
ஈன்றவர்களை நாடி வந்து
ஊர் போற்றும் அதிசயமாய்
ஏந்திடுங்கள் உங்கள் மழலைகளாய்!