பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!
தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!
வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!
பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!
எதிர்காலமாய் தோன்றியவள்,
புதிராகவே மறைந்தவள்…!
அவள் நினைவாய் இப்போதும்
ரணகளமாய் நொடி-பொழுதுகள்…!!