பகிர்தல்

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி

வரம்போடு தம்வாழ்வை
    வகுத்தளித்து வாழ்ந்துவந்த
பெரம்பலூரில் பிறந்திட்ட
    பெருவைரம் இராமதாசு,
உரமாக இருந்துவந்து
    உயர்வான சிற்றிதழைத்
தரமான எழுத்துகளால்
 

 » Read more about: சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!  »

புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…

பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…

 » Read more about: சுதந்திரம்  »

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா
என விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.

அவன் என் மூத்த சகோதரன்.

கொஞ்சம் கொஞ்சமாக
பெண்ணாகிக் கொண்டிருந்தான்.

படுக்கையில் விலகித்தெரிந்த
அவன் கொலுசுக் கால்களை
பார்த்துவிட்டு முதன்முதலில்
அதிர்ச்சியானவன் நான்தான்.

 » Read more about: அவன் என் மூத்த சகோதரன்  »

புதுக் கவிதை

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த கவிதை

மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது

ஒற்றைக் குடை
இருவர் பயணம்
அனாதை சாலை
சீதளக்காற்று மெல்லிய உரசல்
பகல் இரவு
புணர் பொழுது

சொர்க்கம் பற்றிய
சந்(தேகம்) தீர்ந்தது
இன்றோடு!

 » Read more about: நேற்று பெய்த மழையில்…  »

By ஆயுதா, ago
புதுக் கவிதை

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;

 » Read more about: மது குடிக்கும் உயிர்  »

புதுக் கவிதை

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில்
கரியமிலவாயு நான்,
பிராணவாயு நீ!

பருகும் நீரில்
ஹைட்ரஜன் நான்,
ஆக்சிஜன் நீ!

எரியும் விளக்கில்
வெப்பம் நான்,

 » Read more about: பிராணவாயு நீ !  »

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

புதுக் கவிதை

ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!

சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !

காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…

 » Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!  »

கவிதை

காலச்சக்கரம்

கெட்ட பெயரும் கிட்டும் நல்ல பெயரும் வரும் ---------- பட்டப் பெயராய் பொற்காலம் கேடுகாலமென்பர் திட்டமிட்டபடி செய்ய இயலாதவர் பழியுரைப்பர் ---------- வட்டமடித்துத் திரும்ப வராததுதான் கொடுமை வசந்த காலம் வலம்வரும் காதலர்க்கு இனிதாம் ---------- கசந்த காலமோ தோல்வியில் உழல்பவர் ஏசவே அசராது ஓடுபவர் காலத்தோடு ஓடலாம் மகிழ்வே ---------- மசமச என சோம்பல்கொண்டோர் பின்தங்குவரே

புதுக் கவிதை

அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!

ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!! பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான் எவ்வளவு பாசம். கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா? இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!! தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள் அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக. தம்பியும் கல்வியை கையில் ஏந்தி தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.