நில்லாமல் ஓடும் நிரந்தர விளையாட்டுக்காரி
———- சொல்லாமல் சுணங்காமல் காரியமாற்றுபவள்
இல்லாதது இருப்பது என்ற வேறுபாடறியாள்
———- பொல்லாதது என சொல்பவரையும் ஏற்பாளே

கெட்ட பெயரும் கிட்டும் நல்ல பெயரும் வரும்
———- பட்டப் பெயராய் பொற்காலம் கேடுகாலமென்பர்
திட்டமிட்டபடி செய்ய இயலாதவர் பழியுரைப்பர்
———- வட்டமடித்துத் திரும்ப வராததுதான் கொடுமை

வசந்த காலம் வலம்வரும் காதலர்க்கு இனிதாம்
———- கசந்த காலமோ தோல்வியில் உழல்பவர் ஏசவே
அசராது ஓடுபவர் காலத்தோடு ஓடலாம் மகிழ்வே
———- மசமச என சோம்பல்கொண்டோர் பின்தங்குவரே

காலம் பொன்னைவிட மதிப்புமிக்க மாணிக்கம்
———- கோலம் மாறாது கொள்கையில் பிடிப்பானதது
ஞாலமே காலத்தைச் சார்ந்தே நடைபயில்கிறதே
———- பாலமாய் காலச் சக்கரத்தை இயக்கி விடுகிறதே

ஒவ்வொரு நொடியும் உன்னதமான புகழேணி
———- அவ்வொரு நொடி போனால் மீண்டு அது வராதே
வெவ்வேறு காலங்கள் விரைந்தே போய்விடுமே
———- ஒவ்வாத செயல்கள் செய்யாது கூட நடப்போமே

நல்லன செய்து நலம்பெற கொடுத்துதவி உலகில்
———- அல்லன நீக்கி அன்புலகில் அரவணைப்போடு
இல்லறம் நடத்தி இன்பம் காணலாம் காலத்தோடு
——– சொல்லறம் கொண்டு சிறப்பாக்குவோம் காலத்தை.

Categories: கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.