புதுக் கவிதை
நேற்று பெய்த மழையில்…
நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த கவிதை
மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது
ஒற்றைக் குடை
இருவர் பயணம்
அனாதை சாலை
சீதளக்காற்று மெல்லிய உரசல்
பகல் இரவு
புணர் பொழுது
சொர்க்கம் பற்றிய
சந்(தேகம்) தீர்ந்தது
இன்றோடு!