காத்திருத்தல்

மழை நேரத்தில்தான் இந்த மரங்களையும் செடிகளையும் பார்க்க முடியும் என்று தோன்றியது. வெறும் பார்வையிடல் இல்லை. ரசித்து உட்கார்ந்து கொள்ளும் அந்தச் சின்னக்குட்டியை வேறு எப்போது அழைத்து வந்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் இருக்காது. இப்போது தூறல் கூட இல்லை.

சின்னக்குட்டி கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சுற்றிக் கொண்டே வந்தாள். குச்சியைச் சுற்றிக் கொண்டு வரும்போதும் பாட்டு. எந்த விஷயமானாலும் பாட்டு மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மீன் பிடிக்கலாமா? என்று கேட்டாள். ஊஞ்சல் ஆடினாள். மறுபடியும் வாட்ச்மேனின் குரல் கேட்டது. முகம் சுளித்துச் சிணுங்கிக் கொண்டே “வாங்கப்பா போகலாம்” என்றாள்.

புதுமைப் பெண்ணிவளா?

அலாரம் அடிக்கு முன்னே அயராதக் கண்களுடன் ஆதவன் அவளழகு முகத்தில் விழித்தே சிரிப்பான் ! தட்டி எழுப்பிய செல்வங்களை தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித் தாரமாகி, தன் துணையின் தேவைகளைக் கவனிப்பாள் ! சிக்கென்று உடை அணிந்து சிங்காரமாய் சிகைத் திருத்தி சில்லென்ற குளிர் வெளியில் சீக்கிரமாய்ப் பணிக்குச் செல்வாள் ! ஆடவர் பலருக்கு நிகராக அயராது உழைப்பைத் தருவாள் ! ஆதாயம் Read more

தனிக்குடித்தனம்

பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது. அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள். சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள். பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. மனைவிக்கு பிரசவ வலி எடுப்பதாக Read more

ஃபேஸ்புக் பொண்ணு!

குமாருக்கு எல்லாமே ஃபேஸ்புக்தான். வீட்டில், அலுவலகத்தில், பஸ்ஸில்,டிரைனில்,பாத்ரூமில் என எந்நேரமும் ஃபேஸ்புக்கிலேயே வாழ்ந்தான். ஃபேஸ்புக்கிலேயே சுடுகாடிருந்தால் அவன் செத்தபிறகு அங்கேயே புதைத்துவிடலாம் என்கிற அளவுக்கு ஃபேஸ்புக்கையும் அவனையும் பிரிக்க முடியாது! அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து படிய தலைவாரி, முகத்துக்கு பவுடரும் போட்டு.. கடவுளை வணங்கி, கந்த சஷ்டி கவசமும் பாடி திருநீரு பூசி கீபோர்டை Read more

காமக் குரங்கு

“இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்” என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். “உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்” என்று பார்வை பேசிற்று.

பாசக்கடல்

துன்பக் கடலினிலே – நான்
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் – என்
எண்ணத்திலே நிறைவாள்!

பாலில் சுவைசேர்த்தே – என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல – அவள்
நுண்ணிய அறிவுடையாள்!

கற்பு

இராமாயணத்தில் 60,000 மனைவியருடன் வாழ்ந்த தயரதனிடம் யாரவது உன் கற்பென்ன என்று வினவினரா? இல்லை தன் அரசனுக்காக போரிட்டு பெண்ணை வென்றுகொண்டுவந்த பீஷ்மரிடம் கேட்டார்களா? ,இன்னொருவருக்காக நீ எப்படி சுயம்வரத்திற்கு செல்லலாம் என்று? ஏனென்றால் திணிக்க பட்ட எதையும் இங்கே பெண்கள் பொறுத்து கொள்ளவேண்டும். நிழலை கூட பெண்கள் பார்ப்பது தவறென்ற காலம் மாறி சுயம்வரம் மூலம் மனதுக்குகந்தவனை பெண்கள் தேர்ந்தெடுக்க கூடிய நிலை வந்தது ஒருவகையில் சிறிய முன்னேற்றம் என்று கொள்ளலாம்.

சூப்பர் ஹிட் வெள்ளி

பக்கத்து வீட்டு சங்ரம்மாவின் ஐந்து வயது மகள் ப்ரியாவிடம் வந்து, ” தம்பிப் பாப்பாவுக்கு காய்ச்சல். அம்மா உங்ககிட்ட 100 ரூபா வாங்கிட்டு வரச் சொன்னாங்க ” என்று, அந்த பிஞ்சு மழலை மொழியில் சொல்ல, ப்ரியாவிற்கு கோபம் தலைக்கேறியது. “ஏண்டி… ஒங்கம்மாவுக்கு என்னக்கி காசு கேக்கறதுன்னு வெவஸ்தையேயில்ல. வெள்ளிக் கிழமயும் அதுவுமா, காலங்காத்தால. போடி, Read more

பாபருக்கும், இராமருக்கும் பகைமை என்ன?

ஒருமுறை நான் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது சென்னையிலிருந்து பாண்டிச்சேரிவரை திருவள்ளுவர் பஸ்ஸிலே பயணம் செய்ய நேரிட்டது. காலைநேரம். ஒருவன் தாம்பரம் வரை போக வேண்டுமென்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். “ஏண்டா சாவு கிராக்கி பேமானி காலையில் நூறு ரூபா நோட்டைக் கொண்டு வந்திட்டியாடா, உனக்கெல்லாம் இதே பொழப்பாய் போச்சி. இறங்குடா வண்டியை விட்டுயு என்று வாய்க்கு Read more