பிம்பம்

அம்மா, ஏம்மா நான் இவ்வளவு கருப்பா இருக்கேன்? கடந்த இரண்டு ஆண்டுகளில் புவனா இதே கேள்வியைப் பல முறை கேட்டு விட்டாள். தான் சிவப்பாக இல்லையென்று அவளுக்குக் கழுத்து வரை குறை. ஒரே மகளின் மனம் அவளுக்குக் கண்ணாடியின் பிரதி பிம்பமாகவே தெரிந்திருந்தது. புவனாவின் வயதில் இத்தகைய எண்ணங்கள் தோன்றுவது மிகவும் இயற்கை. பதினைந்து வயதில் தன்னைப் பற்றிய எண்ணங்கள் அதிகம் இளையர்களுக்கு மேலிடுவதும் வந்தனா அறிந்ததே. தன்னை மற்றவர்கள் Read more

ஜெயந்தி பேசுகிறேன்…

மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் கோயம்புத்தூரிலிருந்து ஷில்லாங் வரை சுற்றிப் படித்துள்ளேன். அப்பாவின் வேலை அப்படி. திருச்சியில் சீதாலக்ஷ்மி ராமசாமி கல்லூரியில் 1985ல் BSc Physics பட்டம் பெற்றேன். இரண்டாம் மொழியாகப்படித்த தமிழை ஏழாம் வகுப்பிலேயே விட்டுவிட்டு வடமாநிலங்களில் ஹிந்தி படித்து, பிறகு மதிப்பெண்ணிற்காக கல்லூரியில் சம்ஸ்கிருதம் படித்தேன். தமிழே படித்திருக்கலாம் என்று பலமுறை எண்ணிக் கொள்கிறேன் இப்போதெல்லாம்.

‘சுபாஷிதம்’

மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன். நல்ல மொழிப் புலமை மற்றும் விமரிசனப் பார்வையுடைய அறிஞர் இந்நூலுக்கு விமரிசனமாகவோ மதிப்புரையாகவோ எழுதுவது தான் பொருத்தம். இருப்பினும், ஒரு அறிமுகமாகவேனும் எழுதிவிட என் கை பரபரத்தது. எழுத முடிவெடுத்தேன். முடிவு சரி தானாவென்று ஐயம் மட்டும் Read more