மரபுக் கவிதை
காலனைக் கண்டேன்!
பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப்
…… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும்
ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற
…… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும்
தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச்
……
பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப்
…… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும்
ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற
…… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும்
தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச்
……
செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்
செந்தமிழே கல்விமொழி; தெருவி லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்
செந்தமிழே மழலைமொழி;
பிறக்கப் போகும் புத்தாண்டு
. பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
. பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
. செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
.
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே
தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும்
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
நிறையட்டும் நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே
வாய்மை வெல்லும் எனச்சொல்லி
….. வழக்கு மன்ற நடுவினிலே
தாய்மை கொள்ளும் பெண்ணிடத்தில்
….. தராசைக் கையில் கொடுத்துவிட்டுத்
தூய்மை நீதி தேவதையாய்த்
…..
முண்டாசு கட்டிய பாரதியே செல்வ
……. பாரதியே முத்தமிழ் கொட்டிய
அண்ட சராசரம் எங்கிலுமே கவி
……. ஆக்கிக் கொடுத்தனை வாழியவே!
சித்திர பானுவில் கார்த்திகையில் தமிழ்ச்
…….
(கும்மி)
கொள்ளைய டித்திட வந்தப றங்கிகள்
கூடாரத் தைவிட்டு ஓடிட வே
துள்ளியெ ழுந்திட்ட வீரமு ழக்கத்தின்
சொந்தக்கா ரக்கவி பாரதி யே!
வெந்தணற் வீச்சொடு வந்திட்ட தீக்கவி
வெள்ளைப்ப றங்கியை வீழ்த்திட வே
தந்திட்ட பாட்டனின் தாளிரு பூக்களைத்
தாங்கிப்பு கழ்ந்திட வாருங்க ளேன்!
ஆங்கிலேயன் ஆட்சிசெய்த அடிமை மண்ணில்
—– அருங்கவிஞர் பாரதிதான் வாழ்ந்தி டாமல்
பாங்கான புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து
—– பாரதத்து விடுதலையின் உணர்வை ஏற்றும்
தீங்கனலில் கவிதைகளை இயற்றி வந்த
—–
நெல்லும் விளைஞ்சிருக்கு
நெஞ்சும் நிறைஞ்சிருக்கு!
அல்லி மலருவொன்னு
அங்கே பூத்திருக்கு!
துள்ளும் அழகிருக்கு
தூண்டில் கண்ணிருக்கு
அள்ளி அணைப்பதற்கு
ஆசை மிகுந்திருக்கு!
வரப்பு வயலோரம்
வசந்தம் அமர்ந்திருக்கு
கருப்புக் குயிலுவொன்னு
காத்துத் தவமிருக்கு!
சாமத்தில் எழுந்து
காமத்தில் நுழைந்து
மோகத்தை விதைத்தாயடா – இரு
போகத்தை அறுத்தாயடா.
வேகத்தில் மிதந்து
சோகத்தை மறந்து
தேகத்தை வதைத்தாயடா – என்
தூக்கத்தைக் கெடுத்தாயடா.