கவிதை
எங்கேயும் நீ
கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்?
கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்?
மங்கை செங்கூந்தலாய் வளைந்தே தொடரும் வரப்பில் விளையாடும் மாந்தர் நாங்கள் உன் கூந்தல் பூக்கள் !
எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே
அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே
நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே
பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்
நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே
தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ
நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ
பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!
தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!
வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!
பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!
கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!
வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!
எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??
நாம் அன்பால் இணைந்தோம்
நம் உறவின் அர்த்தம்?
இன்னமும் புரியவில்லை எனக்கு!
நம்முள் விரிசல் ஏற்படுமோ
அச்சம் என்னுள் தினமும்.
உன் நினைவால் நானும்
உன்னை என்னவனாய் நினைத்து
வாடுகிறேன் நாளும் சருகாய் …
ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.
ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?
நிறுத்தாத பேச்சும் நிமிடத்திற்கொரு முத்தமுமென சொர்க்க மத்தியில்தானே மனங்கள் மணக்க மணக்க கை கோர்த்து நடந்தோம்