பச்சை பட்டுடுத்த மண்ணின்
வனப்பில் இச்சைக் கொள்ளா
கண்கள் இல்லை!

குனிந்து முத்தமிடும் அறுவடை
மங்கைக்கு உன் ஆடை மீது
எப்போதும் ஓர் பார்வை!

மங்கை முகப்பருவாய்
காலைப்பனித்துளியை
போக்கும் மென்சூரியக் கதிர்
வைத்திய மூலைகை உனக்கு !

மங்கை செங்கூந்தலாய்
வளைந்தே தொடரும்
வரப்பில் விளையாடும்
மாந்தர் நாங்கள்
உன் கூந்தல் பூக்கள் !

அழகெல்லாம் தன்னில் வைத்து
அமைதியாய் காற்றோடு
இசைப்பாடி தலையாட்டும்
வயல்வெளி அழகை
காண கண் கோடி வேண்டும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.