பச்சை பட்டுடுத்த மண்ணின்
வனப்பில் இச்சைக் கொள்ளா
கண்கள் இல்லை!
குனிந்து முத்தமிடும் அறுவடை
மங்கைக்கு உன் ஆடை மீது
எப்போதும் ஓர் பார்வை!
மங்கை முகப்பருவாய்
காலைப்பனித்துளியை
போக்கும் மென்சூரியக் கதிர்
வைத்திய மூலைகை உனக்கு !
மங்கை செங்கூந்தலாய்
வளைந்தே தொடரும்
வரப்பில் விளையாடும்
மாந்தர் நாங்கள்
உன் கூந்தல் பூக்கள் !
அழகெல்லாம் தன்னில் வைத்து
அமைதியாய் காற்றோடு
இசைப்பாடி தலையாட்டும்
வயல்வெளி அழகை
காண கண் கோடி வேண்டும்!