கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்? இப்படி என நினைத்து,
கோவிலுக்கு சென்றால்
அங்கே நீ… எனது
கடவுளாகத் தெரிகிறாய்!
எங்கும் நீயாக இருக்கும்போது
உனக்கு மட்டும் ஏன்
என்னை தெரியவில்லை?
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.