ஹைக்கூ ஓர் அறிமுகம் – 05

05 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம் எனலாம். கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் இதனை சிந்தர், வாமனக் கவிதைகள் என்கிறார். கூடவே ஹைக்கூ வெறும் வடிவம் என்றே பலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அது உள்ளடக்க தளத்திலும் மரபு வழிவந்த நுட்பமான பரிமாணங்களையும் கொண்டது. ஜென் புத்தமத தத்துவப் பார்வையும், ஜப்பானிய வாழ்க்கை முறையும் சார்ந்த ஒரு நுட்பமான கவி வடிவம் ஆகும். நாம் தமிழில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04

04 ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ.. தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது. ஜப்பானில் எடோ மரபு காலத்தில் துவங்கி… டோக்கியோ மரபு காலத்தில் பெரும் புகழடையத் துவங்கிய ஹைக்கூ.. ஜப்பானில் இன்று வரை 5, 7,5 என்ற அசை கட்டுப்பாட்டில் எழுதப்படும் மரபுக் கவிதையாகும். ஜப்பான் எழுத்துக்கள் சீனப் பாரம்பரிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03

03 ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ.. 1916 இல் பாரதி சுதேசமித்திரனில் ஹைக்கூ குறித்து கட்டுரை எழுதியும் கூட..தமிழ் கவிஞர்களும்..தமிழ் இலக்கிய உலகும் இவ்வடிவத்தை பெரிதாய் கவனத்தில் கொள்ளவில்லை. அதன் பின் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரே 1966 ஜனவரியில் கணையாழி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02

02 ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஹைக்கூ..ஜப்பானில் பிறந்திருந்தாலும் இன்று உலகம் முழுவதும் பரவலாக வரவேற்பையும்.. புகழையும் பெற்ற ஒரு கவிதை வடிவமாக இருப்பதற்கு எளிய வடிவ அமைப்பேயாகும்.. அது மட்டுமல்லாது வாசகனையும் சிந்திக்கத் தூண்டி விடும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01

ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல ஹைக்கூ கவிதைகள் பலரால் இன்று ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது..ஒரு புதிய கவிஞரின் முதல் தொகுப்பு ஹைக்கூவாகவே இருக்கிறது..ஹைக்கூ சின்னதாய் தோற்றமளிக்கும் பெரிய அற்புதம்.. அத்தகைய ஹைக்கூவை எழுதுகின்ற கவிஞர்களுக்கு இக்கட்டுரை சிறப்பான பல Read more

ஹைக்கூவின் பண்புகள்

ஹைக்கூ கவிதைகளைக் குறித்த இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும் மூன்றடிகளால் பாடுவது. ஹைக்கூ கற்பனையை ஏற்காது. ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும் ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது. ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை. கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை. பிரச்சாரமின்மை. எளிமையாகக் கூறுவது. சொல்லுவதைக் Read more

காலமெல்லாம் தமிழ்

தமிழில் ஹைக்கூ கவிதைகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ Read more

துளிப்பா

சொல்லித்தந்தப் பாடம் பதியவில்லை மனதில் ஆசிரியை முகம் ! எங்கள் வீட்டு தோட்டத்தில் மலராத மொட்டு முதிர்கன்னி. வீட்டுவாசல் வந்து முழம்போட்டுத் தருகிறாள் பூக்காரி குறைந்த கூலி அவன் நிறைவடைகிறான் முதலாளி. சிக்கிக்கொண்டேன் அவளிடம் கசக்கிப் பிழிகிறாள் மனைவி வாசமில்லாமல் நிற்கிறாள் மனைவி கையில் காசில்லை வாங்கிதர மல்லிகைப்பூ. அழகிய காகிதப்பூ எப்போதும் மணம் வீசும் பூசிய வாசனைத் திரவியம் அழைக்காமல் வந்ததால் சன்னல் கதவைச் சாத்துகிறேன் மழை மலரென்று Read more

காலமெல்லாம் தமிழ் – தமிழில் ஹைக்கூ கவிதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியத் தொன்மைமிகு செம்மொழித் தமிழ் வளமையுடன் காலம் காலமாய்ப் பொலிவோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இயல் இசை நாடகம் என முத்தமிழில் மொழியின் பரிணாமத்தை காலமெல்லாம் கண்டும் கேட்டும் படித்தும் உணர்ந்தும் மகிழ்வெய்தும் உலகின் கோடான கோடி தமிழ் நெஞ்சங்கள், கவிதைகள் வழி மொழியின் அடர்த்தியை அன்றாடம் உள்வாங்கி வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சங்ககால மரபுக்கவிதைகள், இருபதாம் நூற்றாண்டு புதுக்கவிதைகள் மற்றும் நவீனத்துவ கவிதைகளை வாசித்த மக்களுக்கு Read more

சிறுவரிக் கவிதைகள்

மண்ணில் புதைந்தாலும் விண்ணோக்கி எழுவோம் விதைகள்! மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி, எழுத்தாளன் முகத்தில்! புத்தக வெளியீடு! மூச்சைவிற்று வாழ்க்கை நடத்துகிறான் பலூன்காரன்! கசக்கிப் பிழிந்தாலும் கை மணக்கச் செய்வோம் பூக்கள்! எவ்வளவு மது அருந்தினாலும் யாருக்கும் கஷ்டங்கள் கொடுக்கமாட்டோம் வண்டுகள்! கடலில் முகம் பார்த்தால் கரைக்கு இழுத்துச் செல்கின்றன அலைகள் நிலா! குடியிருந்ததை, கூடுகட்டி வாழ்ந்ததை கண்டுகொள்ளாமல் செல்கின்றனவே பறவைகள் பட்டமரம்! என்னைப் புதைத்து உன்னை உயர்த்துவேன்! (மரங்களிடம்) வேர்கள்!