கவிதைக்கழகு இலக்கணம் – 4

தொடர் 4 எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஒரே ஒரு எதுகை அதுவும் அடி எதுகை ஒன்று மட்டுமே கவிதைகளில் பயன்படுத்தினால் போதும் . கவிதை சிறக்கும் ; அழகாகத் தோற்றமளிக்கும். மற்ற எதுகைகள் தானாக வந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். வலிய சேர்க்க வேண்டாம். இப்போது Read more

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள் நம்பி : ஏ.டி.வரதராசன்  நங்கை : கலைச்செல்வி திருமண நன்னாள் : 09.04.2020 மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறென்ற – தொன்மைத் திருக்குறள் போல் செவ்வியராய் வாழ்க திருப்பூட்டு இந்நாள் சிறந்து! தோழர் வரதராசன் தோழி கலைச்செல்வியுடன் வாழ்வாங்கு வாழ்கவென நெஞ்சுவந்து வாழ்த்துறைத்தோம்.. வாழையடி வாழையென வாழியவே பல்லாண்டு சூழும் நலங்களெல்லாம் துய்த்து பெறற்கரிய பேறெல்லாம் பெற்று வாழ்க திறல்சேர் மகப்பெறுக செவ்வை – அறங்காத்து Read more

யாளியும்… சக்தியும்…

முன்னுரை உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்… “கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்” பிறந்த, நம் தமிழ் இனத்தின் கலை, இலக்கியங்களோடு புதைந்தும், கோவில் பிரகாரங்களில் தன் வரலாற்றுச் சுவடுகளை, இன்றும் சுமந்து கொண்டு இருக்கும், யாளிகள் பற்றிய நூல்களோ..? விரல்விட்டு, எண்ணும் படியே இருப்பது Read more

தாயுமானவன்

அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவும் இவனும் தனியா பொழப்ப ஓட்டுனாக மத்தவங்க எல்லாம் வந்து பாத்துட்டுப் போவாக. இவன அம்மா நல்லா இருக்குறவரைக்கும் முடிஞ்ச அளவு கவனிச்சிச்சி. அது அடிக்கடி Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 3

தொடர் – 3 இதுவரை 5 எதுகைகளைப் பார்த்தோம் இப்போது மேலும் மூன்று எதுகைகளைக் காண்போம்       6.மேற்கதுவாய் எதுகை ஒரு அடியில் 1,3,4 சீர்கள் ஒரே எதுகை பெற்று வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும் எடுத்துக் காட்டு விண்மகள் பெற்றெடுத்த தண்ணிலவே பெண்மகளே மண்மகள் வாழ்த்துகின்ற பண்ணிசையே வண்டமிழே கண்விழியால் எனைமயக்கும் கண்ணகியே உண்டிடவா? செண்டுமலர் ஆடுகின்ற பெண்ணெழிலைக் கண்டிடவா?// கீழ்க்கதுவாய் எதுகை ஒரு அடியில் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 2

தொடர் – 2 எதுகை தொடர்ச்சி இதுவரை இரண்டு எதுகைகள் பார்த்தோம் அடி எதுகை மற்றும் இணை எதுகை மற்றவற்றைப் பார்க்குமுன் ஒரு குறிப்பு இது எதுகையை எழுதும் போது நாம் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.( நன்றி. கவிமாமணி வெற்றிப்பேரொளி ஐயா அவர்களுக்கு) இரண்டாவது எழுத்தைப் பார்க்குமுன் முதல் எழுத்தையும் நாம் கவனத்தில் அவசியம் கொள்ளவேண்டும். முதல் எழுத்து என்ன வகையில் உள்ளதோ அதே வகையில் அடுத்த எதுகையின் Read more

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்

உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர்‌ மு.ராம்குமார் இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கவிஞர் தனது முதல் கவிதை தொகுப்பிலே பலவிதமாக பலவித கோணங்களில் மாறுபட்ட எண்ணங்கொண்டு எழுத்தியலாக முழங்குகிறார்.சில Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 1

வணக்கம் நண்பர்களே – இராம வேல்முருகன் நாம் சிகையலங்காரம் முகச்சவரம் முகப்பூச்சு வண்ண ஆடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது நம்மை அழகாகக் காட்டுவதற்குத்தான். இதுபோலவே ஒரு கவிதைக்கும் அழகு சேர்ப்பதற்காக அதற்கு எதுகை மோனை1 இயைபு போன்றவற்றைச் சேர்த்து எழுதும் போது அக்கவிதை மேலும் அழகு உள்ளதாக இருக்கும். இப்போது எதுகை என்றால் என்ன என்று பார்ப்போம் எதுகை இது கவிதைக்கு அழகூட்டும் ஒரு அமைப்பு. இது இல்லாமலும் கவிதைகள் எழுதலாம் Read more

தென்றலின் தேடலில்…

தென்றலின் தேடலில் நுழைந்தேன். அசையாதிருக்கும் மரத்தை அசைத்து அழகும், சுகமுமூட்டும் தென்றல் காற்றென நம்மையும் அழைக்கிறது தென்றலின் தேடல் கவிதை நூல். பாரதியின் வரவிற்குப் பின் தமிழ்ச் சமுதாயத்தில் கவிஞர்கள் பெருகி வளர, முக நூல் அவர்களுக்கு பெருங்களமாகி வளர்க்கிறது. நூலாசிரியரும் முகநூலில் சிறப்பாக வலம் வருகிறார். குழுக்களில் அடமினாக இருப்பவர்களில் எழுத முடிவதே ஆச்சர்யமெனில் எதுகை, மோனை, இயைபுவென வெகு சிறப்புடன் கவிகளையெழுதி புத்தகமாக்கியிருப்பது ஆச்சர்யம் தான். புத்தகத்தில் Read more

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.” “பைத்தியமா அருண்? Read more