தொடர் 4

எதுகையைப் பற்றிய ஒரு தெளிவு வந்திருக்கும் எனக் கருதுகிறேன். பத்துவகையான எதுகைகளைத் தெரிந்து கொண்டாலும் அவை அனைத்தையும் நாம் கவிதைகளில் பயன்படுத்த வேண்டுமா என்றால் தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஒரே ஒரு எதுகை அதுவும் அடி எதுகை ஒன்று மட்டுமே கவிதைகளில் பயன்படுத்தினால் போதும் . கவிதை சிறக்கும் ; அழகாகத் தோற்றமளிக்கும். மற்ற எதுகைகள் தானாக வந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள். வலிய சேர்க்க வேண்டாம்.

இப்போது போட்டிக்கு வருவோம்

கடைசி இரண்டு எதுகை தவிர்த்து

நான்கு அடிகளில் அடிஎதுகை வருமாறு ஒரு பாடல் . ஒவ்வொரு அடியிலும் ஏதேனும் மற்றொரு எதுகையும் வந்தால் சிறப்பு .

சிறப்பாக எழுதும் ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு பாரதிதாசனின் கவிதைகள் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்..

நீங்கள் தயாரா???

செந்தமிழே எந்தாயே சீர்நிறைந்த நறுந்தேனே
சந்தனமாய் கமழ்கின்ற முந்திவந்த தெள்ளமுதே
பந்தமெலாம் நீயன்றோ பாசமுள்ள நந்தவனம்
வந்தனைகள் தந்துனையே எந்நாளும் வணங்கிடுவேன்

  1. அடிஎதுகை

செந்தமிழே
சந்தனமாய்
பந்தமெலாம்
வந்தனைகள்

  1. இணைஎதுகை 1, 2

செந்தமிழே – எந்தாயே

  1. பொழிப்பு எதுகை 1, 3

சந்தனமாய் – முந்திவந்த

  1. ஒருஉ எதுகை 1, 4

பந்தமெலாம் – நந்தவனம்

  1. கூழை எதுகை 1, 2, 3

வந்தனைகள்
தந்துனையே
எந்நாளும்

எடுத்துக்காட்டுப் பாடலில் 5 எதுகைகள் வந்துள்ளன

இவ்வாறு தாங்களும் முயலுங்கள்

அடுத்து வரும் பகுதி மோனை…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »