முன்னுரை

உலக அரங்கில் சில எலும்புத் துண்டுகளை மட்டுமே வைத்து, டைனோசருக்கு உருவம் கொடுத்து, பல நாவல்களும், பல்வேறு திரைப்படங்களும் வெளியிட்டு, தன் ஆளுமையை நிலைநாட்டிய மேலை நாட்டினருக்கு மத்தியில்…

“கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த குடியில்” பிறந்த, நம் தமிழ் இனத்தின் கலை, இலக்கியங்களோடு புதைந்தும், கோவில் பிரகாரங்களில் தன் வரலாற்றுச் சுவடுகளை, இன்றும் சுமந்து கொண்டு இருக்கும், யாளிகள் பற்றிய நூல்களோ..? விரல்விட்டு, எண்ணும் படியே இருப்பது வேதனை…

இந்திய இராணுவத்தில் பணியாற்றும், சிவ.தங்கராஜ் என்ற நான். ‘தமிழ் தம்பி’ என்ற புனைப்பெயரில்…

மறைந்து போன யாளிகள் பற்றிய தேடல்களை தூண்டும் நோக்கத்தோடு, இந்த சரித்திரக் கதை புனைக்கப்படுகிறது…

எனது கற்பனைகளில் வரும் காட்சிகள், வருங்காலத் தேடல்களின் ஆய்வின் முடிவில், உண்மைத்தன்மையை பிரதிபலிக்கும் வரிகளை உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடும்.

இருப்பிடம் விட்டு இருப்பிடம் நகர்ந்து, தமது அறிவியல் ஆளுமையை
அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வியந்து நிற்க.

ஊர்கள் விட்டு, ஊர்கள் நகர்ந்த நாம், பல நாடுகளை கடந்து சென்று ஆளுமை செய்கின்றோம்..!

இன்று உலகமே வியக்கும் வகையில், கோள்கள் விட்டு கோள்கள் தாவி, புருவம் உயர்த்த விஞ்ஞானத்தில் வியக்கும் உச்சத்தில் இருக்கிறோம்.

நாம்,
நமது பயணங்கள்…
அகல்விளக்கு வெளிச்சம் போலவே இன்றும் இருக்கிறது.
தொலைதூரம் வரை பிரகாசம் தந்தும்,  தன் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் அகழாய்வு எனும், இருளில் புதைந்து கிடக்கும் யாளிகளோடு என் கற்பனைப் பயணம்…

இன்றைய காலத்திய கதைமாந்தர்களோடு காலக்கோட்டிற்குள் நுழைந்து,  உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்…

அன்புடன்,
தமிழ் தம்பி..✍️

கதைக்குள் செல்வோம்…


1 Comment

சுரேஷ் · மே 29, 2020 at 6 h 36 min

அருமை, அருமை

பாராட்ட வார்த்தைகள் இல்லை.

உங்கள் முயற்சி இதுவரை யாரும் செய்யாத ஒன்று.

சிறப்பாக செய்து முடித்து, புத்தகமாக வெளிவர வாழ்த்துகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..