1

‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…!

எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’

“சக்தி”

பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில், நமது குழந்தையாகிடும் அன்பும், சிரிப்பும் மிகுந்தவள். அம்மன் சிலை போல அழகு முகம் கொண்டவள். கோபக்கார சுட்டிக்குழந்தை இவள்.

பூர்வீகம் திருநெல்வேலியில் இருந்தாலும், பள்ளி விடுமுறைக்காக தஞ்சையில் பாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளாள்.

‘என்னாங்க பாட்டி..! கூப்புட்டீங்களா..?

பக்கத்து தெருவுல… கொட்டு அடுச்சு, கொழவை போட்டு போனாங்க… அதான்..! வேடிக்கை பார்க்க போனேன் பாட்டி..!’ என்று, மழலை குரலில் கெஞ்ச…

‘ம், சரி..! கண்ணு… எங்கையும் போனா..? அம்மத்தா கிட்ட, ஒரு வார்த்தை சொல்லுடா..! செல்லம்…’

‘ம்…ம்.ம். சரிங்க பாட்டி..!’

‘தண்ணீ காய்ஞ்சிருச்சு.ல…

வா..டா..! அம்மா குளிக்க.’

அரக்கு, சீயக்காய், மஞ்சள் பூசி குளித்து, மங்களகரமாய் பட்டுப் பாவாடை, சட்டையில் இரட்டை சடை பின்னி, தாத்தாவின் விரல்கள் பிடித்து, பெருவுடையார் கோவிலை நோக்கி முன்னேற…

வானுயர கோபுரம் நிமிர்ந்து நிற்கிறது.

சவுக்கு மரத்தின் சாரங்கள் குறுக்கும், நெடுக்குமாக பின்னிப் பிணைந்து இருக்கிறது. ஒலியும், ஒளியும் இதமாய் பக்தி பரவசத்தில் தவழ்ந்திட… கதிரவன் கண்விழித்து கோபுரக் கலசங்களை முத்தமிட்டதும், கோபுரத்தை கருடன் வட்டமிட…

அட.டா..?

தஞ்சை நகரம் முழுவதும் “ஓம் நமச்சிவாயா..! ஓம் நமச்சிவாயா..!! ஓம் நமச்சிவாயா..!!!” என்று… ஓம்கார ஓசையில் ஒலியெழுப்ப, விண்ணுலக தேவர்கள் எல்லோரும் தீர்த்தங்களை சாரல் மழையாக தூவிய காட்சியில்…

சிலு…சிலுவென… உரோமங்கள் குத்தி நிற்க, தன்னிலை மறந்து… இரு கைகள் குவித்து வானுயர “ஓம் நமச்சிவாயா” “ஓம் நமச்சிவாயா” என்று, ஈசன் மடியில் மயங்கிச் சாய்ந்தாள் சக்தி.

சக்தி..! சக்தி..! என்ன ஆச்சு..! தாத்தாவின் நா தளதளக்க… அக்கம், பக்கம் இருப்பவர்கள், சக்தி முகத்தில் தண்ணீர் தெளித்து, திருநீறு பூசியதும்… கண் விழித்துப் பார்த்தாள்.

நெஞ்சில் அணைத்தபடி வீட்டுக்கு, போகலாமாடா..? தங்கம். என்று, தாத்தா கூற…

‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்…

 


1 Comment

Shanthi L · மார்ச் 28, 2021 at 12 h 56 min

நான் உங்க கதையை நான் புதிதாக தொடங்க இருக்கும் youtube சேனலில் போடலாமா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..