மரபுக் கவிதை

அவளென் அதிகாரம்

(கலிவெண்பா)

சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்;

 » Read more about: அவளென் அதிகாரம்  »

மரபுக் கவிதை

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

குரல்: பாத்திமா பர்சானா

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
—— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
—— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
——

 » Read more about: ஏழ்மையின் எதிர்பார்ப்பு  »

மரபுக் கவிதை

பகையைத் துடைத்திடு

 

 எட்டுக் குடி கொண்ட இறைவா
எட்டும் மக்கள் குரல் கேட்டு வா விரைவா
கொட்டும் வெற்றி முரசு நமக்கே
கொஞ்சும் தமிழ் ஒலிக்கும் நமக்கே

பகையைக் கண்டு துடைத்திடு
பசுமையை எங்கும் விதைத்திடு
பகை என்ற நிலையை உதைத்திடு
பைந்தமிழே பாராள வகை செய்திடு

அடிமைக் கொண்டது தமிழினமா –

 » Read more about: பகையைத் துடைத்திடு  »

புதுக் கவிதை

மெய்யும் பொய்யும்

முஹம்மட் றாபி

தையும் மார்கழியும்
மாறி மாறி,
வயதுகள் நெய்யும்.

தாயும் ‘ஆ’ வும்
பருகத் தர,
காயும் கனியும்.

கனியக் கனிய
இளமைப் பழங்களை,

 » Read more about: மெய்யும் பொய்யும்  »

புதுக் கவிதை

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:

மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,

 » Read more about: அம்மா…!  »

புதுக் கவிதை

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள் மரணம்!

பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!

 » Read more about: புதுமைப்பெண்  »

புதுக் கவிதை

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!

மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!

 » Read more about: புன்னகைக்கிறேன்!  »

புதுக் கவிதை

நெற்றி முத்தம்

ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!

வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …

முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …

 » Read more about: நெற்றி முத்தம்  »

புதுக் கவிதை

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா

பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….

தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,

 » Read more about: எள்ளாதே  »

புதுக் கவிதை

கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி


மதுரைத்தாயின்
மூத்தமகனே..
கவிதையாய் மனதில்
பூத்த மகனே…!!!

மஹியும் பேகமும்
நபிகளுக்கு
பிரியமானவர்களானார்கள்
உன்னை ஈன்றதால்…

இன்று நபிகளை
பிரியமானவராக்கிக்
கொண்டாய்
மரணத்தை நீ ஈன்றதால்…!!

 » Read more about: கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி  »