மரபுக் கவிதை
அவளென் அதிகாரம்
(கலிவெண்பா)
சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்;