புதுக் கவிதை

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி:

மங்காத ஒளியாக,
அணையாத நெருப்பாக,
களையாத மேகமாக,
ஓயாத அலையாக,
நிற்காத தென்றலாக,
மறையாத சூரியனாக,

 » Read more about: அம்மா…!  »

பகிர்தல்

ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு

சூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன்,

 » Read more about: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு  »

புதுக் கவிதை

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள் மரணம்!

பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!

 » Read more about: புதுமைப்பெண்  »

புதுக் கவிதை

புன்னகைக்கிறேன்!

சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!

மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!

 » Read more about: புன்னகைக்கிறேன்!  »

புதுக் கவிதை

நெற்றி முத்தம்

ஒரு தடவை,
இரு தடவை,
பல தடவைகள் …
கலங்கிக் கலங்கி
தெளிந்தே விட்டேன்!

வேதாளம்
மீண்டும் மீண்டும்
ஏறட்டும் …

முழு இரவும்
என் தூக்கம்
திருடட்டும் …

 » Read more about: நெற்றி முத்தம்  »

புதுக் கவிதை

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா

பட்டம் பெற்றவரே
பார் போற்றும் பெருந்தலையே,
தரையைத் தொடாமலே
வானில் நீர் பறந்தீரோ ….

தயங்கித் தயங்கியே
திக்கெட்டும் தட்டுகிறேன்,

 » Read more about: எள்ளாதே  »

சிறுகதை

புதுச் சப்பாத்து

இரவின் இருள் கிழித்து தன் அதிகாரத்தை பரப்பும் முயற்சியில் அதிகாலை சூரியன் தன் கதிர்களை மெல்ல மெல்லப் பரப்பி மலை முகடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தான். அவன் மீது கொண்ட காதலாலோ என்னவோ பனித்துளிகள் எல்லாம் கசிந்து உருகிக்கொண்டிருந்தன.

 » Read more about: புதுச் சப்பாத்து  »

புதுக் கவிதை

கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி


மதுரைத்தாயின்
மூத்தமகனே..
கவிதையாய் மனதில்
பூத்த மகனே…!!!

மஹியும் பேகமும்
நபிகளுக்கு
பிரியமானவர்களானார்கள்
உன்னை ஈன்றதால்…

இன்று நபிகளை
பிரியமானவராக்கிக்
கொண்டாய்
மரணத்தை நீ ஈன்றதால்…!!

 » Read more about: கவிக்கோவிற்கு கவிதாஞ்சலி  »

சிறுகதை

இணைந்த வாழ்க்கை

நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்..

பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்..

 » Read more about: இணைந்த வாழ்க்கை  »