புதுக் கவிதை
வரம் வேண்டும்
குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன்
தாகம் தீரப் பருக வேண்டும் !
அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !
குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன்
தாகம் தீரப் பருக வேண்டும் !
அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !
ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.
மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது.
» Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01 »
உலகமெங்கும் பெண்ணியம் பேசும் நேரத்தில், மென்மையாக நீங்கள் பெண்ணியத்தை ஒத்துக் கொள்ளாததன் காரணமென்ன..
சுவாரசியமான கேள்வி .. முதலில் “மென்மையாக” எனும் உங்கள் குறிப்பீடு அழகாக இருப்பதுடன் என் மீதான உங்கள் புரிதலைப் புரிய வைக்கிறது.
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06-2019 »
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !
நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே
செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே
செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே
உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே
பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே
தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே
எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?
யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், » Read more about: யாளி – 4 »
புராண மிருகமான யாளி தமிழக கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் இந்த பிரமாண்ட புராண விலங்கின் உருவத்தை சிலைகளாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆன்மீகம்:~ ~~~~~~~~ ஒரு சுவரசியமான கதையோடு துவங்குவோம்..! » Read more about: யாளி – 3 »
சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
» Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 05-2019 »யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..! » Read more about: யாளி – 2 »