யாளியும்… சக்தியும்… 3

3 ‘ஏ…ங்க, தாத்தா..! சாமியை பார்க்கவே முடியாதா..?’ என்று, வெகுளியாய் சக்தி கேட்டாள். ‘இப்ப, கும்பாபிஷேகம் நடக்கிறதால… சாமியை பார்க்க முடியாது.டா..! தங்கம்… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கலாம். கூட்டமும் இருக்காது..!’ ‘ம்.ம்கூம்… சரிங்க. தாத்தா..!’ தாத்தாவும், பேத்தியும், களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தனர். ‘இவ்வளவு கூட்டத்துல… பேத்தி சொல்லக் கேட்டு, போகனுமா..? சாயங்காலம் போயிருக்கலாம்.ல’ என்றபடியே… ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தார் பாட்டி. சிறிது Read more

மலர்வனம் 1

ஹைக்கூ ரசிகுணா 1 ஆடு மேய்த்தவன் ஓய்வெடுக்கும் போது துரத்தியது வெயில். 2 மழையும் வெயிலும் வேடிக்கை பார்க்கிறேன் அதற்கிடையே வானவில்.. 3 இந்தப் பிரபஞ்சம் இயங்க மறுத்து விட்டால் உலகமே மயானம்.. 4 பூச்செடி வைக்க குழி தோண்டினான் தாத்தாவைப் புதைத்த இடத்தில் 5 கிளிஞ்சல்கள் விற்கும் சிறுமியின் பை நிறைய கடலின் வாசனை… 6 மலைக் கோவில் கூடாரத்தில் வந்தமர்ந்த காகம் என்ன வரம் பெற்றதோ.. 7 Read more

யாளியும்… சக்தியும்… 2

2 ‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார். வண்ண வண்ண பலூன்கள், ராட்டினங்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் புதிது புதிதாக சாலையின் இருபுறமும் நிறைந்து இருக்க… சக்தி மயங்கி விழுந்ததை மறக்கச் செய்ய ‘ஏதாச்சும் விளையாட்டுச் சாமான்கள் வேணுமா..? தங்கம்’ என்று, கேட்க… ‘அதெல்லாம், ஒன்னும் வேணாம்.ங்க தாத்தா..!’ என்றபடியே… தலையாட்டி பொம்மை, தலையைத் Read more

யாளியும்… சக்தியும்… 1

1 ‘சக்தி..! சக்தி..!! அம்மா… சக்தி…! எங்க போனா..? இவ… சொல்லாம கொல்லாம…’ “சக்தி” பெயருக்கு ஏற்ப வலிமையோடும், துறு… துறு… வென இருப்பாள். பார்த்த மாத்திரத்தில், நமது குழந்தையாகிடும் அன்பும், சிரிப்பும் மிகுந்தவள். அம்மன் சிலை போல அழகு முகம் கொண்டவள். கோபக்கார சுட்டிக்குழந்தை இவள். பூர்வீகம் திருநெல்வேலியில் இருந்தாலும், பள்ளி விடுமுறைக்காக தஞ்சையில் பாட்டியிடம் தஞ்சமடைந்துள்ளாள். ‘என்னாங்க பாட்டி..! கூப்புட்டீங்களா..? பக்கத்து தெருவுல… கொட்டு அடுச்சு, கொழவை போட்டு Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10 ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம். இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது. இது இரண்டு குறில்களால் தொடங்காது குறில் + நெடிலுடன் தொடங்காது நெடிலில் தொடங்கும் நெடில் + குறிலாக வரும் நெடில் + மெய்யெழுத்துடன் வரும் குறில் + மெய்யெழுத்துடன் வரும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் கவிதை × = கவி / தை கனாக்கள் × = கனாக் / கள் காலை √ Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9 இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் . இப்போது அசையையும் சீரையும் பார்ப்போம். மரபுக்கவிதை எழுத வரும் அனைவருமே யோசிப்பது இந்த அசை மற்றும் சீர்கள் பற்றித்தான். இவை ஒன்றும் நாம் பயப்படும் அளவுக்கானது அல்ல. தற்போது நாம் தெரிந்து கொள்ள தண்டு அசைகள் இரண்டே இரண்டுதான். Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8 இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம் இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம் ஒருஉ இயைபு ஓரடியில் உள்ள நான்கு சீர்களில் ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும் எடுத்துக்காட்டு  1. எழுஞாயிறின் ஒளியாயெழு தமிழைத்தினம் தொழுதேத்திடு விழுதாயிரு தமிழ்மாமலை உளமேற்றியே தொழுதேத்திடு மேற்கண்ட பாடலில் எழுக 1 மற்றும் 4 ஆம் சீர்களில் வந்துள்ளதால் ஒருஉ இயைபு ஆயிற்று Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 7

தொடர் – 7 எதுகையையும் மோனையையும் பார்த்துவிட்டோம். இப்போது இயைபைப் பற்றிப் பார்ப்போம். இந்த இயைபு உங்கள் கவிதையை மேலும் அழகாக்கும். இது பெரும்பாலும் திரைப்படப் பாடல்கள் மற்றும் சந்தப்பாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டு பட்ட பகலிலொரு நெட்டைக் கனவெனக்குப் பாடலதை அள்ளியள்ளி நிறைக்கும் படும் பாடுகளை மெல்லவது மறைக்கும் குட்டை மனிதனெனக் கொட்டும் கொடுக்கெடுத்துக் கூடுவிட்டுக் கூடுவந்துக் கெடுக்கும் ஒரு கொள்கையின்றி கண்டதையும் கொடுக்கும் மேற்கண்ட பாட்டில் நிறைக்கும் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 6

தொடர் 6 இதுவரை 3 மோனைகளைப் பார்த்துவிட்டோம். இப்போது மற்றவற்றையும் காணலாம் 4. ஒருஉ மோனை ஓரடியில் உள்ள முதல் மற்றும் நான்காம் சீர்கள் முதல் எழுத்தில் ஒன்றிவருவது ஒருஉ மோனை எனப்படும். எடுத்துக்காட்டு அகர முதல எழுத்தெல்லாம் ஆதி அகர – ஆதி ஒருஉ மோனை கண்கள் வழியே வழியும் காதல் கருத்தில் சிறந்து மனத்தைக் கவரும் கண்கள் – காதல் கருத்தில் – கவரும் ஒருஉமோனை 5. Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 5

தொடர் 5 எதுகையை கடந்த பகுதிகளில் பார்த்தோம் எதுகை இருந்தால் மோனையும் கட்டாயம் அந்த இடத்தில் வரும். மரபு என்றாலே எதுகை மோனை பார்ப்பார்கள் என்பார்கள் கிராமத்து வழக்கில் “எகனை மொகனை” என்பார்கள். எதுகை என்பது காதணி எனலாம். காதணிகளில் பலவகைகள் உண்டு; தோடு, கம்மல், ஜிமிக்கி, மேல்தோடு, வளையம் என பலவகைகள் உள்ளன போல எதுகைகளில் பலவகைகளைக் கண்டோம். இப்போது மோனை மூக்கில் அணியும் அணிகலன்கள் போல. முக்குத்தி Read more