தொடர் 11

மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம்.

இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம்.

பெயர் : கூவிளம்
வாய்பாடு : நேர் நிரை

பாடகன்
கூவிளம்
கூவி்டும்
மாதவம்

இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள். அனைத்தும் ஒன்றாகவே இருக்கும்.

பா / டகன் / பா – தனி நெடில் – நேர்
டகன் – இருகுறில் + ஒற்று – நிரை

கூ / விடும்
மா / தவம்
கூ / விளம்

இவை யாவும் நேர் நிரை தான்

கால்வழி
கார்முகில்
பார்வதி
பன்முகம்
கைவளை
தண்மலர்
வன்முறை

இவைகளும் நேர் நிரைதான்

இதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எனப் பார்ப்போம்

  1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
  2. குறில் + நெடிலுடன் தொடங்காது
  3. நெடிலில் தொடங்கும்
  4. நெடில் + குறிலாக வரும்
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
  6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்
  7. நெடில் ஒற்று இருகுறில்
  8. குறில் ஒற்று இருகுறில்
  9. நெடில் ஒற்று குறில்நெடில்
  10. குறில் ஒற்று குறில் நெடில்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

குருவி ×
படாத ×
பாடுது √ பா / டுது
பார்வையில் √ பார். / வையில் நேர் நிரை
பண்படு √ பண் / படு நேர் நிரை
நாட்டினீர் √ நாட் / டினீர்
குத்தினீர் √ குத்/தினீர்

அடுத்து கருவிளம்

பெயர் : கருவிளம்
வாய்பாடு : நிரை நிரை

கருமலை
கருவிழி
இருமலர்
விழிமலர்
தொழிலகம்
எழிலகம்
எழில்மலர்
தொழில்வழி
நறுமுகை
நறுந்தமிழ்

களேபரம்
உலாவரும்
ஒரேநிலா
ஒரேகதிர்
பராபரம்

இவைகளை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்.

உச்சரிப்பிலேயே கருவிளம் தெரியும்.

கரு / மலை நிரை நிரை
உரு / ளுது நிரை நிரை

இதனை எவ்வாறு ஞாபகத்தில் வைத்துக் கொள்வது எனப் பார்ப்போம்…

  1. இது இரண்டு குறில்களால் தொடங்கும்
  2. குறில் + நெடிலுடன் தொடங்கும்
  3. நெடிலில் தொடங்காது
  4. நெடில் + குறிலாக வராது
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வராது
  6. குறில் + மெய்யெழுத்துடன் வராது
  7. இருகுறில் இரு குறில்
  8. இருகுறில் ஒற்று இருகுறில் ஒற்று
  9. குறில்நெடில் குறில்நெடில்
  10. கு நெ ஒற்று கு நெ ஒற்று

இரு / மலர் நிரை நிரை
விழி / எழில் நிரை நிரை
வராதவர் – வரா/தவர் நிரை நிரை
தராதவர் – தரா/தவர் நிரை நிரை

கணீர் கணீர் கணீர் / கணீர் நிரை நிரை

கல கல
பளபள
சடுகுடு
கலக்கலாய்
விளக்கமே
இவை யாவும் கருவிளங்களே

இப்போது நான்கு ஈரசைச் சீர்களையும் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

இப்போது கீழ்க்காணும் கவிதைகளைப் பாருங்கள்.

  1. தேமா மட்டும்

தேவ சேனா சேனை நீயே
தெய்வ நாதச் சேவல் நீயே
பாவ மூட்டைச் சேற்றை நீக்கும்
பக்கு வத்தை தந்தாய் நீயே
காவ லாக வந்து நிற்கும்
கந்த தேவன் கால டிக்கே
ஏவ லாக வாழ்ந்து நானும்
என்றும் சேவை ஆற்று வேனே

  1. புளிமா மட்டும்

முனிவர் வணங்கி மகிழும் தலைவ!
முருக வருக அருளைத் தருக
கனியாய்க் கனிந்து சுவையைத் தருக
கலையாய்த் தமிழை வளர்க்க வருக
தனிப்பே ரரசே தணிகை மலையே
தணிந்து வருக தமிழர்த் தலைவா
பனிவாழ் மலையன் மகனே வருக
பணிந்தே தொழுவேன் பரிசே தருக

  1. கூவிளம் மட்டும்

வேலவா வேல்விழி வள்ளியின் நாயகா
வெற்றியை நல்கிடும் நாதனே போற்றுவேன்
பாலகா பைந்தமிழ்க் காதலா நாதனே
பாழ்வினை நீங்கவே நானுனைப் போற்றுவேன்
கோலமாப் பேரெழில் நாயகா வீரனே
கோமகா கொற்றவை மாமகா போற்றுவேன்
ஆலமர் வேந்தனின் சீர்நுதல் தோன்றிய
ஐங்கரன் தம்பியே அன்பனே போற்றுவேன்

  1. கருவிளம் மட்டும்

பழமென விளங்கிடும் பலம்நிறை மகனவன்
பழனியில் அருள்தரும் பழந்தமிழ் மறையவன்
கிழமென கிழங்கிடம் கிளர்ந்தநல் அருள்மகன்
கிழக்கினில் உதித்திடும் சிவந்தநற் கதிரவன்
அழகினிற் சிறந்தவன் அறிவினில் முதிர்ந்தவன்
அருமறை பரவிய சரவணப் பெருமகன்
குழலினும் இனியநற் குரலினைத் தருபவன்
குகனவன் திருவடிப் பணிந்துநாம் உயர்வமே!

தாங்களும் இதுபோல் முயன்று எழுதிப் பயிற்சி பெறலாமே…

அடுத்து மூவசைச்சீர்களைப் பார்ப்போம்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »