தொடர் 10

ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம்.

இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

  1. இது இரண்டு குறில்களால் தொடங்காது
  2. குறில் + நெடிலுடன் தொடங்காது
  3. நெடிலில் தொடங்கும்
  4. நெடில் + குறிலாக வரும்
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வரும்
  6. குறில் + மெய்யெழுத்துடன் வரும்

எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்

  1. கவிதை × = கவி / தை
  2. கனாக்கள் × = கனாக் / கள்
  3. காலை √ கா/லை தேமா
  4. காது √ கா / து தேமா
  5. காற்று, காற்றே √ காற் / று காற்/றே தேமா
  6. கற்று, கற்றோம்√ கற் / று கற்/றோம் தேமா

இப்போது தேமா மறக்குமா?

உங்கள் பெயரை எடுத்து அசை பிரியுங்கள்

பாமா
பூமா
வேலா
ராசா
ராசன்
ராணி
பாணி
பார்வை
சால்பு
ஈசன்
கண்ணன்
வேலன்
மீனாள்

இவையாவும் தேமா தான்

பிரித்துப் பாருங்கள்

இப்போது புளிமா பற்றிக் காண்போம்

பெயர் : புளிமா

வாய்பாடு : நிரை நேர்

எடுத்துக்காட்டு

கனவு
களவு
கனாக்கள்
பணமே
முருகா
துருவன்
உறவு
இரண்டு
விழுது
விழாவில்
கடலில்

இதனை எப்படி அசை பிரிப்பது என்று பார்க்கலாம்

கனவு – கன/வு — நிரை நேர் புளிமா
விழாவில் – விழா/வில் – நிரைநேர் புளிமா
இரண்டு- இரண்/டு நிரை நேர் புளிமா

முதலில் ஒற்றெழுத்துகளை அடியுங்கள்

அடித்ததற்கு முன்னர் உள்ள எழுத்துகளை வேறாகவும் பின்னர் உள்ள எழுத்துகளை வேறாகவும் அசை பிரிக்க வேண்டும். பிறகு அதன் வாய்பாட்டை வைத்து பெயரை எழுத வேண்டும்.

இப்போது பாருங்கள்…

கொளஞ்சி

இதில் உள்ள ‘ஞ்’ என்ற எழுத்தை எடுத்து விடுங்கள்

கொள/ சி என்றாகும்

கொள என்பது இரண்டு குறில்

இரண்டு குறில் என்றால் நிரை

சி என்பது குறில் தனித்தது

தனித்த குறில் நேர்

இப்போது சேர்த்துப் பாருங்கள்

நிரைநேர்

நிரை நேர் எனில் புளிமா

அவ்வளவுதான்

இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது.

  1. இது இரண்டு குறில்களால் தொடங்கும்
  2. குறில் + நெடிலுடன் தொடங்கும்
  3. தனி்த்தநெடிலில் தொடங்காது
  4. நெடில் + குறிலாக வராது
  5. நெடில் + மெய்யெழுத்துடன் வராது
  6. குறில் + மெய்யெழுத்துடன் வராது
  7. இரண்டுகுறில் + மெய்யெழுத்துடன் வரும்
  8. குறில் + நெடில் + மெய்யெழுத்துடன் வரும்

இப்போது

கீழ்க்காணும் சொற்களை அசை பிரித்துப் பாருங்கள்.

  1. பழகு
  2. செலவு
  3. நலம்சேர்
  4. வியாழன்
  5. இறைவன்
  6. இயற்கை
  7. அரவான்
  8. கடாரம்
  9. சிவனே
  10. வராதோர்

அசை பிரித்து விட்டு இவற்றில் ஏதும் தேமா இருந்தால் சொல்லுங்கள்.

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »