ஹைக்கூ

ரசிகுணா

1

ஆடு மேய்த்தவன்
ஓய்வெடுக்கும் போது
துரத்தியது வெயில்.

2

மழையும் வெயிலும்
வேடிக்கை பார்க்கிறேன்
அதற்கிடையே வானவில்..

3

இந்தப் பிரபஞ்சம்
இயங்க மறுத்து விட்டால்
உலகமே மயானம்..

4

பூச்செடி வைக்க
குழி தோண்டினான்
தாத்தாவைப் புதைத்த இடத்தில்

5

கிளிஞ்சல்கள் விற்கும்
சிறுமியின் பை நிறைய
கடலின் வாசனை…

6

மலைக் கோவில்
கூடாரத்தில் வந்தமர்ந்த காகம்
என்ன வரம் பெற்றதோ..

7

இந்த மார்கழிக் காலையில்
நிலவு மறைவதற்கு முன்பே
சூரிய உதயம்…

8

கலவர பூமியில்
மாபெரும் ஆயுதங்கள்
ரோஜாப் பூக்கள்..

9

கல்லறைத் தோட்டத்தில்
யார் அழைத்தது
இந்தப் பட்டாம்பூச்சிகளை…

10

நெடுஞ்சாலை ஓரத்தில்
பழங்கள் விற்கும் சிறுமியிடம்
ஒரு பாடப்புத்தகம்..

11

தென்னங் குரும்பையை
உருட்டி விளையாடுகிறது
ஒரு பூனைக் குட்டி..

 12

பக்தர்கள் பசியாறியபின்
பசுவிற்கு உணவாகின்றன
அன்னதான இலைகள்..

13

கூண்டில் இருந்த கிளி
பறந்து சென்ற போதிலும்
அதன் வாசனை மாறவில்லை..

14

ஒரு கூட்டத்தைக் கூட்டியது
குளத்து மேட்டில்
கரையேறிய முதலை..

15

ஒரு மூங்கிலை
வெட்டிச் செதுக்கும் போதே
மகன் வாசித்துவிட்டான்..

16

சில்வண்டின் பாடலை
ரசிக்கும் போது
பூவும் அசைந்தாடுகிறது…

17

அடிக்கடி கண்விழித்தேன்
முற்றுப் பெறாமல்
எத்தனை கனவுகள்..

18

இந்த மயான பூமியில்
கல்லறை அனைத்திலும்
எத்தனை சிலுவைகள்..

19

இரவு முழுவதும்
ஒப்பாரி வைத்தது
தாயை இழந்த குட்டி

20

குளிர் காலப் பூனையொன்று
ஓலமிட்டு அழும்போது
குழந்தை சிரிக்கிறது..

Categories: ஹைக்கூ

1 Comment

Rasi · ஏப்ரல் 16, 2020 at 15 h 36 min

சிறப்பு வாழ்த்துகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது மு.முருகேஷ் தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் - ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.