யாளியும்… சக்தியும்… 7

7 ‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி… மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர். பேருந்தும் புறப்பட்டது. சக்தி, இரண்டு முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக கையில் இறுக்கமாக மடியில் வைத்து பிடித்தபடியே இருந்தாள். முட்டைகள் உடைந்துவிடுமோ..? என்ற பயத்தில், ஊருக்கு சென்று சேரும் வரை… சக்திக்கு, தூக்கமே வரவில்லை. வீட்டிற்கு Read more

யாளியும்… சக்தியும்… 6

6 மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியதும்… சக்திக்கு, கிராமமே நகரத்தில் இருப்பது போன்ற, உள்ளுக்குள் ஓர் உணர்வு… ‘இங்க இருந்து, நடந்தே போயிடுவோமோ..? சக்தி…’ ‘ம்ம்… சரிங்க, தாத்தா..!’ பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும்பொழுது… ‘மல்லி… மல்லி… மல்லி…’ என்ற, ஆண் குரல் ஒரு புறம்… ‘மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ… மல்லிகைப்பூ…’ என்று, பெண் குரல் ஒருபுறம்… Read more

யாளியும்… சக்தியும்… 5

5 ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..! சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த, முட்டை வடிவத்தில் இருந்த பொருளை எடுக்க… உடனே..! புருவம் உயர்த்தி, வாய் பிளந்து, ஆச்சரியமாக பார்த்தாள். ஆம்..! அந்த பொருளின் எடை குறைந்து இருந்தது. அவளுக்கு, நம்ப முடியவில்லை. இரண்டு, மூன்று முறை, உள்ளங்கையை மேலே – Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 15

தொடர் 15 இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம். மா விளம் காய் இவை சீர்கள் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் ஈரசைச்சீர்கள் 4 காய்ச்சீர்கள் 4 11 21 12 22 111 211 121 221 தளைகள் இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான் 2 வந்தால் 1 தான் மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் Read more

யாளியும்… சக்தியும்… 4

4 சக்தி கண்களை மூடி, திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கிறாள். மீண்டும் கனவு வரவே இல்லை. சிலநாட்கள் நகர்ந்தது… பாட்டி வீட்டில் இருக்கும் கோழிக் குஞ்சுகளுக்கு, அம்மியில் நுணுக்கிய அரிசியை, பிஞ்சு விரல்களால் தூவித் தூவியே… சக்தி விளையாடிக் கொண்டிருந்தாள்.. ‘இந்தா மா…! சக்தி… நாளைக்கு, தாத்தா கூட ஊருக்குப் போகனும். வந்து, ஒரு வாரம் ஆச்சு.ல… அடுத்தவாரம் பள்ளிக்கூடம் திறக்குறாங்கலாம், அம்மா, அப்பா ஊருக்கு கூட்டியாரச் சொன்னாங்க… சரியா..? டா..! தங்கம்.’ ‘ம், சரிங்க பாட்டி..! Read more

மலர்வனம் 2

தன்முனை இராம வேல்முருகன், வலங்கைமான் 1 புத்தகம் படித்து நிமிர்ந்து பார்த்தேன் புதிய உலகம் கண்ணுக்குத் தெரிந்தது 2 தெரிந்த நண்பர்களைத் தேடிப் பார்த்தேன் வறியவன் ஆனதை உணர்த்திச் சென்றனர் 3 சென்ற காலம் திரும்பி வராது இருக்கும் காலத்தை இறுக்கிப் பிடிப்போம் 4 பிடித்த கவிதைகள் பிடிக்காமல் போயின பொறாமையா ஆதங்கமா காரணம் தெரியவில்லை 5 இல்லாத காரணத்தைத் தேடிப் பார்க்கிறேன் தேர்வு செய்யப்படாத கவிதைக்குச் சொல்ல… 6 Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 14

தொடர் 14 இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா? அன்பைக் கலந்துநாம் அறத்தை வளர்ப்போம்// இன்முகத் தோடுநாம் என்றும் வாழ்வோம் // இந்த இரண்டடிகளைக் காணுங்கள் தேமா கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கூவிளம் தேமா தேமா அனைத்துமே ஈரசைச் சீர்கள் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 13

தொடர் 13 அசைபிரித்தீர்களா? சரிபாருங்கள் இப்போது… வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய் வண்ணமெலாம் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் குடியிருக்கும் – நிரைநிரைநேர் – கருவிளங்காய் வண்டுவந்து – நேர்நிரைநேர் – கூவிளங்காய் தேனெடுக்க – நேர்நிரைநேர் – கூவிளங்காய் வண்ணமலர் நேர்நிரைநேர் – கூவிளங்காய் பூத்திருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் தேனிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் கூட்டினிலே Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 12

தொடர் 12 இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும் காய்ச்சீர் கனிச்சீர் காய்ச்சீர் காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும். தேமா ஒரு நேர் அசை சீர் சேரும்பொழுது தேமாங்காய் என காய்ச்சீர் ஆக மாறும். இவ்வாறு புளிமாவுடன் ஒரு நேரசைச்சீர் சேர்ந்து புளிமாங்காய் என்று Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 11

தொடர் 11 மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம். இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம். பெயர் : கூவிளம் வாய்பாடு : நேர் நிரை பாடகன் கூவிளம் கூவி்டும் மாதவம் இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள். அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். பா / டகன் / பா – தனி நெடில் – நேர் டகன் – Read more