7

‘வாங்க, தாத்தா போகலாம்… வாங்க தாத்தா’ என்று, தாத்தாவோடு அவசரமாக, மீனாட்சி அம்மன் கோவிலை விட்டு வெளியேறினாள் சக்தி…

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த திருநெல்வேலி பேருந்தினுள் இருவரும் ஏறிக்கொண்டனர். பேருந்தும் புறப்பட்டது.

சக்தி, இரண்டு முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக கையில் இறுக்கமாக மடியில் வைத்து பிடித்தபடியே இருந்தாள்.

முட்டைகள் உடைந்துவிடுமோ..? என்ற பயத்தில், ஊருக்கு சென்று சேரும் வரை… சக்திக்கு, தூக்கமே வரவில்லை.

வீட்டிற்கு வந்து சேர, இரவு ஒன்பதரை மணி ஆனது.

‘அப்பா, வாங்க… வாங்க… நல்லா இருக்குறீங்களா..? அம்மா நல்லா இருக்குறாங்களா..? சக்தி, சேட்டை பண்ணாமல், அடக்கம், ஒடுக்கமா இருந்தாளா..?

வாங்க.ப்பா, கை கால் அலம்பி வாங்க… சாப்பாடு, எடுத்து வைக்கிறேன்…’

சக்தி, தனக்கு இருந்த, தனி அறையில் சென்று, முட்டைகள் இருக்கும் பெட்டியை, பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்.

‘அம்மா..! சக்தி… சக்தி… எங்க போனா..? கை, கால் கழுவிட்டு வா..! அம்மா, சாப்பாடு வைக்கிறேன்…’

ம், சரி.மா..! வந்துட்டேன்…

எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, நிறைவாக சாப்பிட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு, எல்லோரும் தூங்கச் சென்றனர்.

சக்தி, இரண்டு முட்டைகள் இருந்த பெட்டியை, நெஞ்சோடு அணைத்தபடியே தூங்கினாள்.

சில நாட்களில்… தாத்தாவும், ஊருக்கு கிளம்பினார்.

சக்தி, பெட்டியை அணைத்தபடியே தூங்குவது, வழக்கமாகிவிட்டது.

ஓர் நாள்… சக்தியின் உடல் சூட்டினால், பொட்டிக்குள் சிறிதாக நகர்வது போன்று, சிறு முனங்கல் சத்தம் கேட்க…

பெட்டியை திறந்து பார்த்தால்..? ஆச்சரியமாக இருந்தது…

ஆம்..! ஒரு முட்டை உடைந்து, பார்ப்பதற்கு, கடற்குதிரை போல… தலையை மட்டும் நீட்டிக்கொண்டு, ஓர் உயிர் வெளியில் வர, எட்டிப் பார்ப்பதை கண்டாள்.

சக்திக்கு, ஒரு புறம் அளவு கடந்த மகிழ்ச்சி..! கூடவே, கொஞ்சம் பயமும் தொற்றிக்கொள்ள… பெட்டியை மூடிக்கொண்டாள்.

சக்திக்கு, தூக்கமே வரவில்லை. சிறிது நேரம் கழித்து, ஆவலோடு பெட்டியை திறக்க, அந்த உயிர் நாக்கை நீட்டி, நீட்டி… கண்களை திறக்க முயற்சிக்கவும்…

சக்தி முகம் சோகமாக பார்த்து, தனது கைவிரல்களை நீட்டியதும், விரல்களை அவ்வுயிர் நாக்கினால் நக்கியதும், சக்திக்குள் ஒரு புதுவித தாய்மை ஆனந்தம்…

விண்ணில் மிதப்பது போன்ற ஓர் உணர்வு, மனதில் ஊற்றெடுத்தது.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..