5

ம். ம்… என்றபடியே… சக்தியை வீட்டிற்கு, அழைத்துச் சென்றார். தாத்தா..!

சக்தி, இரவு படுக்கைக்கு போகும் பொழுது… ஒரு கையில் தலையாட்டி பொம்மையையும், மறு கையில் பெருவுடையார் கோவிலில் கண்டெடுத்த, முட்டை வடிவத்தில் இருந்த பொருளை எடுக்க…

உடனே..! புருவம் உயர்த்தி, வாய் பிளந்து, ஆச்சரியமாக பார்த்தாள்.

ஆம்..! அந்த பொருளின் எடை குறைந்து இருந்தது. அவளுக்கு, நம்ப முடியவில்லை. இரண்டு, மூன்று முறை, உள்ளங்கையை மேலே – கீழே, உயர்த்தி, தாழ்த்தி எடையை அனுமானம் செய்கின்றாள்.

பின்னர், காதுக்கு அருகில் வைத்து, குலுக்கி குலுக்கிப் பார்க்கின்றாள். ஏதோ..? உள்ளுக்குள் முட்டை போல, குலுங்குகின்றது. மேலும், ஆர்வம் அதிகரிக்க… அதிகரிக்க…

காதில் ஒட்டி வைத்து, கண்களை இதமாக மூடி, உற்று நோக்குகின்றாள். காதில் பட்டதும், குளுமையாகவும்… அதோடு, மூச்சு இழுக்கும் அதிர்வலைகளும் கேட்க. இது ஒரு “முட்டை” தான்..! என்ற, தீர்மானத்திற்கு வருகின்றாள் சக்தி.

தலையாட்டி பொம்மையினை அருகில் கிடத்தி விட்டு, இரு உள்ளங்கைகளிலும் வைத்து மூடியபடியே, ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்கின்றாள்.

குளுமை கொஞ்சம் கொஞ்சமாக சக்தியின் கைச்சூட்டில் குறைய ஆரம்பித்தது…

அதிகாலையில் கண் விழித்த சக்தி, அம்மா கொடுத்தனுப்பிய நகைப் பெட்டிக்குள், பழைய தலையணையில் இருந்து, இலவம் பஞ்சினை எடுத்து வைத்து, அதன் மத்தியில் முட்டையை பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

காலையில் சக்தியை தயாராக்கி, கன்னத்தில் முத்தமிட்டு, ‘ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும், மறக்காமல் பாட்டிக்கு ஃபோன் பண்ணனும்’ என்று சொல்லி, தாத்தாவோடு வழியனுப்பினார் பாட்டி.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில், மதுரை… மதுரை… மதுரை… திருநெல்வேலி… திருநெல்வேலி… திருநெல்வேலி… என்று, குரல்கள் கேட்க.

திருநெல்வேலி… திருநெல்வேலி… என்று, கூறிய திசையை நோக்கி, தாத்தா நடந்தார்.

தாத்தாவின் கைகளை பிடித்து இழுத்தபடி… ‘தாத்தா..! தாத்தா..! மதுரைக்கு போய், மீனாட்சியம்மன் கோயிலைப் பார்த்துவிட்டுப் போகலாம்..!’ என்றதும்…

‘ம்…. சரி..! சரி..!’ என்று, இருவரும் மதுரை பேருந்தினுள் ஏறிக்கொண்டனர்.

பேருந்து நகர்ந்த சிறிது நேரத்திலே, தாத்தாவின் கண்கள் அயர்ந்திட…

சக்தி, மடியில் இருந்த பையில் இருந்து, நகைப் பெட்டியை மெதுவாக எடுத்து… எடுத்து.., அடிக்கடி திறந்து பார்த்துக் கொண்டாள்.

பேருந்து, விரைவாக நகர…நகர… சன்னலில் வரும் இதமான காற்றும், தாலாட்டுப் பாடுவது போல இருக்க, அப்படியே தூங்கிவிட்டாள்…

இதுவரையில் பார்த்திராத, அடர்த்தி மிகுந்த நீளமான முடிகளையும், கோரைப் பற்களுடனும், நீளமான நாக்கும் கொண்ட, மிருகம்  ஒன்று… தன், சிறிய முன்னங் கால்களால் வணங்கியதும், பயமும், பதற்றமும் மனதில் தீயாய் பற்றிக்கொள்ள…

பயப்படாதே..! சக்தி… நான், உன் குழந்தை தான்..! என்றதும்…

சுளீர்…! என்று, நீண்ட விசில் சத்தமும், அதோடு சேர்ந்தார்போல,

‘மதுரை வந்தாச்சு..! எல்லாரும் எறங்குங்க… எறங்குங்க…’ என்றதும் தாத்தாவும், சக்தியும் விழித்துக் கொண்டார்கள்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

தொடர் கதை

மஹ்ஜபின் – 3

தொடர் – 03

அவர் வேலை தேடி சவூதி அரேபியா வுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த காலம் அது.

கனவுச் சிறைக்குள் சுதந்திரக் கைதி யாய் சிறகடித்த அவளின் தாய்க்கு வெளி நாட்டு வாழ்க்கையில் இஷ்டம் இல்லை.

 » Read more about: மஹ்ஜபின் – 3  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 2

தொடர் – 02

எப்படியாவது தனது மனதில் உள்ள மூன்றாண்டுக் கால காதலை மஹ்ஜபினிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் அன்றொரு நாள் அவளைச் சந்தித்து தனது காதலையும் நேசத்தையும் காத்திருப்பையும் சொல்லி முடித்தான் கஷ்வின்.

 » Read more about: மஹ்ஜபின் – 2  »

தொடர் கதை

மஹ்ஜபின் – 1

மஹ்ஜபின் என அறிந்து கொண்ட நாட்களில்  இருந்து கஷ்வின் அவளை தன் இதயவரையில் மாளிகை கட்டி குடியமர்த்தி இருந்தான். மறு புறமாக ரீஸாவை பார்க்கும் போதல்லாம் அவள் மஹ்ஜபீன் தான் எனத் தெரியாமல் அவளை தப்புத் தப்பாக எண்ணியதை நினைத்து வெட்கித்து தலையை கவிழப் போட்டான். சுமார் மூன்று நான்கு வருடங்களாக அவனது நாடி நாளங்களில் எல்லாம் உருத் தெரியாமல் ஊடுருவி வாழ்ந்து கொண்டிருந்த மஹ்ஜபினின் முகத்தை கண்டு விட்டான் கஷ்வின்.... யுகம் யுகமாய் தவமிருந்த முனிவனுக்கு கிடைத்த வரம் போல இன்றேனும் மஹ்ஜபினைக் கண்டு விட்ட ஜென்மானந்தம் அவனுக்குள் சொல்லி மகிழ வார்த்தைகளே இன்றி அவளுடைய உள்ளமெங்கும் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன..