பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா! அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது. அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு  விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் Read more

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது

மு.முருகேஷ்

தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் – ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

சிறுவர் நலன் காப்போம்!

சிறுவர் நலன்கள் காத்திடுவோம் சிறந்து விளங்கச் செய்திடுவோம் மலரும் அந்த மொட்டுகளின் மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்! சிறகை விரித்துப் பறக்கட்டும் சின்னஞ் சிறிய சிட்டுக்கள் இடையில் சிறகைச் சிதைக்காமல் இருந்து காப்போம் நாம்அவரை! மொட்டு மலர்ந்து விரிவதற்குள் மூர்க்கர் பறித்து விடுகின்றார் பட்டாம் பூச்சி பறப்பதற்குள் வண்ணச் சிறகை நசிக்கின்றார் கட்டாந் தரையில் முத்துகளை கல்நெஞ் சர்கள் உடைக்கின்றார் சிற்பி இந்தச் சிறுவர்களின் சின்னஞ் சிறிய கரங்களினை கட்டிப் போட்டு Read more

நாளை நமக்கும் மூப்பு வரும்!

நாளை நமக்கும் மூப்புவரும் நரைக்கும் இளைக்கும் அசதிவரும் இளமைத் தோற்றம் மறைந்துவிட எவர்க்கும் முதுமை வந்துவிடும் முதுமை யாளர் – மூத்தவர்கள் முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள் இளமை வாழ்வை நமக்கென்றே அன்று தொலைத்த பெரியவர்கள் “பழசு” என்றே அவர்களினைப் பழித்தால் மனசு நோகாதோ? அனுப வத்தால் உயர்ந்திட்ட அறிஞர் தம்மை விலக்குவதோ? தள்ளி வைத்து முதியவரைத் தவிக்க விடுதல் முறைதானோ? அள்ளி அணைத்து வளர்த்தவரை அலைந்து திரிய விடலாமோ? தொல்லை Read more

ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும்.

அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி

‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

யாருக்காக…

போலியான மனிதர்களோடு
வாழ்ந்து பழக்கப்பட்டதனால்
உண்மையானவர்கள் யாரென்று கூட
உன்னால் இனங்காண
முடியாமலே போய் விடுகிறது

நீ யாருக்காக
புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ
அவர்கள் யாருக்காகவோ
வாழப் போய் விட்டார்கள்

வா என்னை ஆரத் தழுவிக் கொள்ள..

கற்றவை ஞாபகமில்லை என்கிறாய்
பரவாயில்லை
நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்..
இவைகள் மட்டுமா
இன்னும் சொல்கிறேன் கேள்
என் அன்பு மகளே
சில பொழுது தாயாகவும்
சில பொழுது தந்தையாகவும்
சில பொழுது தோழியாகவும்
சில பொழுது தாதியாகவும்
உனக்காய் மாறுகிறேன்..

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல் பல்லவி. தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!காளிதேவி வடிவில் நின்றாய்..!ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.! (தாயுந்தான்….) சரணம். அருள்மாரி வடிவாகி மருதாம் புலத்தரசி குருவாக எனையாள வரவேண்டுமே.. சிறப்பான தேரேறி சீர்பொலியும் அழகோடுசித்திரத்தைப் போலவுன் உலாக்கோலமே .. ஆதாரம் நீதானே அன்னையுன் சேய்நானே உறவாகி என்றென்றும் இருபோதுமே… பாராளும் உன்பார்வை பத்தினியின் அருள்லீலைபாவங்கள் கரைந்தோடி விடவேண்டுமே..எனையாளும் என் தாயே…எந்தன் ஏக்கங்கள் தீர்ப்பாயே… (தாயுந்தன்….) உலகெங்கும் பரந்தேகி உயர்வுக்கு வழிதேடும்…எமையெல்லாம் நலன்காண Read more