ஹைக்கூ ஓர் அறிமுகம் – 46

தொடர் – 46 ஹைக்கூ உண்மைக்கு நெருக்கமாய் நின்று எழுதப்பட வேண்டிய ஒரு கவிதை வடிவம். ஆகவே தான்.. கற்பனைகளை இதில் தவிர்க்கிறோம்… உவமை..உவமேயங்களையும் இதில் கையாள்வதில்லை.. நாம் காணும் காட்சியை…உணர்ந்த உணர்வினை உண்மைத் தன்மையோடு எந்தவித சமரசங்களுக்கும் இடமின்றி இக்கவிதை வடிவில் தர முயற்சிக்கிறோம். அதே போல.. கவிதைகளுக்கு உகந்த.. பொருத்தமான வார்த்தைகளை கையாளுதலும் மிகமிக அவசியமான ஒன்றாகும். இங்கு ஏற்கனவே இது குறித்த தகவலை நான் பகிர்ந்துள்ளேன்.. Read more

நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. ”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. ‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர். அமைதியானவர். ஆனால் தினம் ஒரு Read more

வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ? பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ? வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே! காதோடு வருடுமந்த காற்றோசை போலக் கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே, வண்ணவண்ண நிறங்கொண்ட வானவில்லைக் கூட்டி வாழ்ந்ததிந்த வாழ்க்கையதன் வாசமதைத் தேடி.. உலவுகின்ற நிலவுபோல உள்ளோடு ஒளிரும் உறைந்தபனிக் குவியலென உள்ளமெல்லாம் சிலிர்க்கும் நினைவோடு கனவினையும் நித்தமிங்கு பூட்டி நிலவுக்கு ஈடாக காலவெளி பறப்போம்!  

விடுபடுதல்

சிலவேளைகளில் கற்பனைகள் உண்மைகளைவிட உன்னதமானவை நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன் பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின கட்டிப்போட்டு பாடம் நடத்தினால் பட்டுப்போய்விடுமென யோசித்தேன் அவற்றின் படபடக்கும் கண்கள் வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின பறக்கத் தொடங்கினோம் கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம் நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன் பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர் விடுதலை பற்றிய பாடத்தில் கூண்டுக்குள் வேண்டாமென காற்றிடம் பெருவெளி கேட்டோம் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 45

தொடர் – 45 ஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும். இக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்.. இடம், பொருள், சூழல், காலநிலை இவையனைத்தும் இணைந்தே பயணிக்கும். இதில் கருப்பொருளோடு முரண்பட்ட விசயங்களைத் திணித்தால் கவிதையின் தன்மை மாறுபட்டு விடும். கோடைக்காலத்தைக் குறித்த ஹைக்கூ எழுதினால்…கோடைகாலத்தோடு இணைந்த விசயங்கள் மட்டுமே அங்கு இடம் பெற வேண்டும். Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 44

தொடர் – 44 ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான். பாஷோ என்பதற்கு ஜப்பான் மொழியில் வாழை மரம் என்று பொருள்..அவரும் வாழை மரத்தைப் போன்றே பலவித பயன்களை (விசயங்களை) ஹைக்கூ கவிஞர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.. இன்றைய பல ஹைக்கூ கவிஞர்களுக்கு பாஷோ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் எனில் அது மிகையன்று.. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 43

தொடர் – 43 ஹைக்கூ வகைமை ஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள். ஏற்கனவே ஹைக்கூ.. சென்ரியுவோடு ஹைபுன்.. லிமரைக்கூ..லிமர்புன் போன்றவைகளைப் பற்றி கண்டோம். இப்போது பழமொன்ரியு மற்றும் மோனைக்கூ பற்றிக் காண்போம். பழமொன்ரியு நம்முடைய தமிழ் பழமொழிகளோடு இணைத்து இணக்கமாகவோ அல்லது முரணாகவோ நகைச்சுவை.. கிண்டல்.. கேலி கலந்து படைக்கப் படுவதை பழமொன்ரியு என்கிறோம். பழமொன்ரியு அவ்வளவாக பிரபலமாக வில்லையெனினும் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 42

தொடர் – 42 ரென்கா எனப்படும் அந்தாதி ஹைக்கூ கவிதை முறை. ஹைக்கூ எழுத்தாளனையும்..வாசகனையும் இணைக்கும் ஓர் அற்புதக் கவிதை வடிவம்..எழுத்தாளன் எழுதிய கோணத்தையும்..பொருளையும் தான் வாசகனும் அறிந்து உணர வேண்டுமென்பதில்லை..வாசகனுக்கு ஹைக்கூ பலவித உணர்வலைகளை உண்டு பண்ணி நகரும் ஆற்றல் கொண்டது. ஹைக்கூ தோன்றிய ஜப்பான் நாட்டில் ஹைக்கூ இயற்கை சார்ந்தும்..ஜென் சார்ந்தும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது..ஆனால் பலவித பருவ மாற்றங்களை கொண்டு விளங்கும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் Read more