தொடர் – 44

ஹைக்கூவில் பாஷோவின் ஆளுமை

பாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694  ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.

பாஷோ என்பதற்கு ஜப்பான் மொழியில் வாழை மரம் என்று பொருள்..அவரும் வாழை மரத்தைப் போன்றே பலவித பயன்களை (விசயங்களை) ஹைக்கூ கவிஞர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்..

இன்றைய பல ஹைக்கூ கவிஞர்களுக்கு பாஷோ ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் எனில் அது மிகையன்று.. ரென்கா.. ஹைக்கூ..ஹைபுன் போன்ற பலவகைமை கவிதைகளில் அவர் சிறந்த ஆசானுமாவார்.

நாம் வாழும் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் பிறக்கிறது..நேற்று போல் இன்று இருப்பதில்லை..இன்று போல் நாளை அமையுமா எனில்..அதுவும் உறுதியாய் சொல்ல இயலாது…வாழ்வில் ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புது அனுபவத்தை..புது விசயமொன்றை கற்றுத் தந்தே நகர்கிறது.

எதைப் போலவும் இல்லை
இதனை ஒப்பிட முடியாது
இந்தக் கோடை நிலவு.

பாஷோ பல கோடை நிலவுகளை கண்டிருக்கலாம்..ஆனால் இன்று அவர் காணும் அந்த நிலவு மற்ற கோடை நிலவினைப் போலில்லை..என்னவோ..ஏதோ நிகழ்ந்திருக்கிறது அவருக்குள்..இந்த கோடை நிலவு அவருக்குள் ஒரு புதிய அனுபவத்தை தந்திருக்க கூடும்..இதை கண்டவுடன் எனக்குள் தமிழ் பட பாடல் பலவும் நினைவுக்கு வருகிறது..

**அன்று வந்தது இதே நிலா..

**அன்றொரு நாள் அதே நிலவில் அவர் இருந்தார் என்னருகிலே..

இன்னும் பல பாடல்கள்..நிலவு கவிஞர்களுக்குள் பேதமின்றி விதைத்து விட்டுப் போகிறது ஏதாவது நினைவலைகளை.

பாஷோவின் இறுதி காலத்தில் அவர் கடைசியாய் பாடிய ஹைக்கூ கவிதை இது..

பயணத்தில் நோய்
என் கனவு அங்குமிங்கும் அலைகிறது
வறண்ட வயல்கள் மீது.

நிலையாய் ஓரிடத்தில் வாழாமல்..அங்குமிங்கும் அலையும் தேசாந்திரியே பாஷோ.. அவரைப் போலவே அவரது கனவும் அலைந்து திரிவதாக சொல்லியிருக்கிறார்.. வறண்ட வயல் என்பது அன்றைய நாளில் அவர் வாழ்ந்த மண் பழைமைவாதிகளால் சூழப்பட்டு பாழ்பட்டு நிற்கும் பூமியை குறிப்பதாக கூட இருக்கலாம்..தான் வாழும் மண்ணின் எதிர் கால நிலையை எண்ணி அவர் கனவு காண்பதாகவும் கொள்ளலாம்.

ஹைக்கூ கவிஞர்கள் சிறப்பான கவிதையை வடிக்க ஆண்டுக் கணக்கில் தவமிருக்கலாம்..ஒரு சிறப்பான கவிதையை வாழ்நாளில் வடித்தாலும் அவன் ஹைக்கூ கவிஞனே..

அக்கவிஞனிடத்தில் இருந்து பலச் சிறப்பான கவிதைகள் பிறக்குமெனில் அவன் ஹைக்கூ ஆசான் ஆவான் என சொல்லிச் சென்றவர் பாஷோ..

ஒரு கவிதை எழுதினாலே போதும்..ஒரு ஹைக்கூ கவிஞனாகி விடலாம் எனில் அந்த ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என… நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இன்னும் வரும்…

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.