கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04

04

ஒரு சின்ன விதைக்குள் தான் மிகப் பெரிய விருட்சம் ஒளிந்திருக்கிறது. அது போல தான் ஹைக்கூ..

தனக்குள் பல கோணங்களையும் வாசிக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளையும் ஏற்படுத்தவல்லது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 04  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03

03

ஹைக்கூ சின்னதாய் காட்சியளிக்கும் ஒரு பெரிய அற்புதம்.மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனத் தமிழில் சொல்லப்படுவதெல்லாம் ஹைக்கூவிற்கும் பொருந்தும்..மூன்று அடிகளில் வாமன அவதாரம் எடுத்த ஒரு இலக்கிய வடிவம் ஹைக்கூ..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 03  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02

02

ஹைக்கூ ஜப்பானில் ஜென் புத்தமதத் துறவிகளால் ஜென் சார்ந்தும்.. அவர்களது வாழ்வியல்.. இயற்கை சார்ந்தும் எழுதப்பட்ட ஒரு கவிதை வடிவம்.. அக்கவிதை ஜப்பானில் பிறந்த விதம் மற்றும் அக்கவிதையின் முன்னோடிக் கவிஞர்கள் குறித்தும் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 02  »

புதுக் கவிதை

வரம் வேண்டும்

குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன் 
தாகம் தீரப் பருக வேண்டும் !

அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !

 » Read more about: வரம் வேண்டும்  »

கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01

ஹைக்கூ எனும் சொல் இன்று கவிஞர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

மூன்றடிகளில் எழுதப்படும் இதன் எளிய தோற்றமும்..உள்ளார்ந்த பொருள் வெளிப்பாடும்..கவிஞனோடு வாசகனையும் தன்பால் ஈர்க்கின்ற ஆற்றலும் ஹைக்கூவை பலரும் எழுதவும்..ரசிக்கவும் செய்திருக்கிறது.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 01  »

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

புதுக் கவிதை

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே

செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே

செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே

உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே

பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே

தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே

எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?

 » Read more about: வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »

மரபுக் கவிதை

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,

 » Read more about: ஆடிடு பெண்ணே  »