தாயுமானவன்

அவனுக்கு ரெண்டு அக்காமாருக ஒரு தங்கச்சி ஒரு தம்பி அப்பா சிகிரெட் புடிச்சி குமிச்சதால போய்ச்சேந்துட்டாரு மாரடைப்புல . இவனத்தவிர மீதி எல்லாருக்கும் கலியணாமாகி வெளியூறு போயிட்டாங்க .இம்புட்டுக்கும் இவந்தான் எல்லாத்துக்கும் மூத்தவன் ஆனா கலியாணம் பண்ணிக்கல குடும்பத்த கரைசேக்க. அப்பா போனதுக்கப்புறம் அம்மாவும் இவனும் தனியா பொழப்ப ஓட்டுனாக மத்தவங்க எல்லாம் வந்து பாத்துட்டுப் போவாக. இவன அம்மா நல்லா இருக்குறவரைக்கும் முடிஞ்ச அளவு கவனிச்சிச்சி. அது அடிக்கடி Read more

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது

மாங்காய் பருவத்தில், அருண் தனித்திருந்த மேலுமொரு நாள் தொடங்கியது  சிங்களச் சிறுகதை – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “மஞ்சு சொல்றான் அவனுக்கு என்னோட சுருண்ட கூந்தல் பிடிக்கலையாம். ஸ்ட்ரைட் பண்ணிக்கட்டுமாம்.” “நீ எதுக்கு உனக்கு இயற்கையா அமைஞ்ச கூந்தலை இன்னொருத்தருக்காக மாத்திக்கணும்? மஞ்சுவைக் கை விட்டுட்டு சுருண்ட கூந்தலை விரும்புற ஒருத்தரைத் தேடிக்கோ. ஸ்ட்ரைட் கூந்தலிருக்குற ஒரு பொம்பளையைத் தேடிக்கோன்னு மஞ்சுக்கிட்டயும் சொல்லு.” “பைத்தியமா அருண்? Read more

நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது. ”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது. ஆனா, இங்கே கட்டைவண்டியும், சைக்கிளும்தான்…” என்று பட்டணத்து பெருமை பேசியது நகரத்து காக்கா. ‘பட்டணத்துல அப்படி என்னதான் இருக்குன்னு நாமளும் போய் பார்த்துட்டு வருவோம்’ என்று நகரத்து காக்காவுடன் புறப்பட்டு போனது கிராமத்து காக்கா. Read more

சொள்ளை

கடல் அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது. கொஞ்சம் சிணுங்கலுடன் சேலையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு கரை வந்தாள். கடல்மணலில் உக்காந்திருந்த கட்டுமரத்தில் அவள் உக்காந்தாள். திரும்ப கடலை வெறித்தாள். இந்தக் கடல்தானே தன் வாழ்வைப் புரட்டிப் போட்டது. நிலைகுலையச் செய்தது. என்றாலும் அவளுக்கு ஏனோ அதன்மீது கோபம் வரவில்லை. இன்று ஏனோ புதுவிதமான உணர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் வந்து நின்றான் கதிர். இவன் தன் பழைய காதலைச் Read more

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

ரெஜினா பவன்

இரவை தின்ன ஆரம்பித்தது அதிகாலை வெளிச்சம். இப்படியே இந்த இரவு நீண்டு கொண்டே போக கூடாதா என தினம் தோறும் தோன்று அளவிற்கு வெளிச்சத்தின் மீது அதீத கோபம் கொண்டவன் கார்த்தி.இரவு நீண்டால் இன்னும் கொஞச நேரம் ஓய்வெடுக்கலாம் என்றும், செய்த வேலையே செய்வதனால் எற்படுகிற சலிப்பும் தான் காரணம். இரவிற்கு உணவு தேவையில்லை. பணம் தேவையில்லை. பயணம் தேவையில்லை.  கண்மூடி மயங்கி கிடக்கும் வித்தை தெரிந்தால் போதும். இரவு Read more

வேப்பமரத்து விருந்தாளிகள்

வீடுகட்டும் வேலை நடந்துக் கொண்டி ருந்தது. சுற்றிலும் கல்லும், மண்ணுமாய் குவிக்கப்பட்டிருந்தது. வேலையாட்கள் பரப் பரப்பாக வேலையில் ஈடு பட்டிருந்தார்கள். இங்கப் பாருப்பா! இந்த செங்கல் எல்லாம் மேல போகணும். ஒரு நாலுபேர் பின்பக்கம் பூச்சு வேலையை முடிங்க! நாளை காலையில முன்பக்க வேலைக்கு சாரம் கட்ட ஆட்கள் வந்திடுவாங்கன்னு அந்த வீட்டைக் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ள பொறியாளர் எல்லோரையும் வேலை வாங்கிக் கொண்டிருந்தார். வேலை செய்யும் ஆட்கள் முன்னும் Read more

டைரிக்குறிப்பு…

குளிரும்.. மழையும் கைகோர்த்து.. அஸ்ஸாமின் அழகிய நகரம் ஜோர்ஹட்டை மேலும் அழகாக்கி கொண்டிருந்தன.. மாலை நான்கு மணிக்கே இருள் சூழத் தொடங்கியது.. பரத் அம்மா வீட்டிற்குள் நுழைந்தேன்.. அவர் கணவருடன் பணிபுரியும் இளைஞரொருவர் திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு வெளியேறினார்.. தயாராகயிருந்த பால் பொடியில் போட்ட தேனீர் கோப்பையை தந்தாள்.. அவளும் பருகிய படி தொடங்கினாள்.. வந்துட்டுப்போனானே.. அவன் யாரு தெரியுமாயென்றாள்.. தெரியாதே யாருன்னு கேட்டேன்.. எங்கவூர் வெட்டியான் Read more

இந்திப் படித்த வெள்ளித் தட்டு

ஒவ்வொரு நாளிரவும்.. விஜி குழந்தைக்கு கதை சொல்வது வழக்கம்.. அதில் சொந்தக் கதை.. சோகக் கதையும் இருக்கும்.. அப்படியொருநாள்.. விஜி தனது ஆறுமாத குழந்தையிடம் கதை சொல்லிக்கொண்டிருந்தாள்.. குழந்தையும் குஷியாக காலக் கைய ஆட்டி.. தரையை காலால் உதைத்து.. கால் தண்டையின் பரல்கள் சத்தமிட.. பொக்கைவாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.. அம்மாவிடம்.. ம்.. ம்.. சொல்லி கதை கேட்டுக் கொண்டிருந்தது.. இந்த வர்ணனைகளை நான் எழுதுவதற்குள்.. கதை விறுவிறுப்பாக போய்க் Read more