பூபாளம் பாடும் பரணி

நேர்காணல்  / மின்னிதழ் தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர். மத்திய அரசுப் பணியில் இருந்த போதும் ஓய்வின்றி ஒருநாளும் தவறாது பூபாளம் பாடிய பரணி இவர். ஆம் பரணி சுப சேகர் என்ற கவிஞரைத் தெரியாதர் இருக்க Read more

அகவை முதிர்ந்த இளந்தென்றல்

மின்னிதழ் / நேர்காணல் சந்திப்பு : பாவலர்மணி இராம வேல்முருகன் கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும். அத்தகைய உணர்வை, இன்பத்தை நமக்கு இப்போது ஒருவரின் கவிதை வழங்குமேயானால் அது இவரது கவிதைதான்.இவரது எந்தவொரு கவிதையை நாம் படித்தாலும் Read more

மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் பாவலர்மணி இராம வேல்முருகன் தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல. தமிழால் வளர்பவர்களைவிட தொடக்கக் கல்வியைக்கூட நிறைவுசெய்யாத ஒரு வரைத் தமிழ் தெரிவுசெய்து கொண்டது வியப்புக்குரியதே. சிறுவயதில் மேடைப் பேச்சுகளைக் கேட்டதாலும் திரைப்பட வசனங்களை Read more

காங்கோவில் தமிழர் கிரிஜாவின் கல்விச்சேவை

தமிழ்நெஞ்சம் அயலக தமிழ் உறவாகக் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டின் தலைநகர் கின்சாசாவில் செயல்பட்டு வரும் EIS (ஈ.ஐ.எஸ்) பள்ளியின் தாளாளர்கள் திரு.கண்ணன் – திருமதி.கிரிஜா கண்ணன் இணையரைத் தொடர்பு கொண்டோம். வாருங்கள் இந்த தமிழ் உறவுகளை அறிந்து கொள்வோம். இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக ‘‘இங்கிலீஷ் இன்டர்நேஷனல் ஸ்கூல்’’ என்ற பள்ளியின் மூலம் ஆங்கில வழிக்கல்வியை போதித்து கொண்டு வருகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால், பிரெஞ்சு மொழி அலுவல் Read more

அமைதிப்பூங்கா இராணிலட்சுமி

மின்னிதழ் / நேர்காணல் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர். தமிழை விரும்பிப் படித்து முதுகலைப் பட்டம் பெற்று மரபுக்கவிதைகளை யாக்கும் திறன் பெற்ற கவிஞர். ஏழைகளுக்கு அன்னமிடும் அன்னலட்சுமி. முகநூல்குழுமங்களை நேசிக்கும் புரவலர். இப்படிப்பட்ட பன்முகத் திறன் கொண்ட சகோதரி திருமதி இராணிலட்சுமி அவர்களைத்தான் நாம் Read more

தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்

தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.

மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்

நேர்காணல் காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர். காளமேகப்புலவரைப் போலவே மதுரையில் 40 வருடங்களாக ஒருவர் பாக்கள் யாத்து அசத்தி வருகிறார். ஆம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் இவரது கணீர்க்குரலைக் கேட்கலாம். இவரது பட்டறையில் பட்டை Read more

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 06 – 2020

தமிழ்நெஞ்சம் இதழுக்கான, நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஒரு எழுத்தாளர். சமூக ஆர்வலர், விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் எனப் பல பரிமாணங்களில் மிளிரும், இலங்கையிலிருந்து வெளிவரும் பூங்காவனம் இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். தமிழ்நெஞ்சம் – ஜூன் 2020 உங்களைப் பற்றிய அறிமுகத்தைக் கூறுங்கள்? பாய்ந்தோடும் இயற்கை எழிலாய் நில்வளா கங்கையும் நீலவானின் நிறத்தை யொத்த அழகிய கடலும் கொண்டமைந்த இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள வெலிகமையே எனது பிறப்பிடமாகும். இந்த Read more

பெய்யென பெய்யும் மழை

அரை நூற்றாண்டுக்கும் முன்பேத் தமிழிலக்கிய அரங்குகளுக்கு அறிமுகமாகி மரபுக்கவிதை, இலக்கியச் சொற்பொழிகள், பட்டிமண்டபங்கள், வழக்காடு மன்றங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள், திறனாய்வு உதவி, எனப் பலதுறைகளில் தன் சுவடுகளை அழுத்தமாய்ப் பதித்துத் தொடருந் தமிழறிஞர் தங்க அன்புவல்லி அம்மாவுக்கு வணக்கம் சொல்லி மகிழ்ந்து வாழ்த்த வேண்டித் தொடங்குகிறேன். எதையும் தொடங்கச் சிறந்த இடம் முதன்முதல் தொடங்கிய இடம்தான் என்பர். (Let us begin at the very beginning; a very Read more

பெண்ணின் பெருந்தகையும், மண்ணின் விருதுகளும்

தமிழ்நெஞ்சம் இதழின் இணையாசிரியர் முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரிக்கு மிகச் சமீபத்தில் ‘‘ஆச்சார்யா சக்திவிருது’’, ‘‘திருப்பூர் சக்தி விருது’’ என இருவிருதுகள் அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆச்சார்யா நிறுவனம், திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் இவ்விருதுகளை வழங்கிப் பெருமைபடுத்தியது. அவ்விருது மங்கை செல்வக்குமாரி அவர்களின் நேர்க்காணல் இதோ… இந்த ஆண்டில் இரு சக்தி விருதுகளை வாங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.. இவ்விருதுகள் குறிப்பாக பெண்களுக்கு அளிக்கப்படும் விருதுகள்.. இவ்விருது களைப் Read more