மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல் பல்லவி இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி மெய்யின் பொருளாகினாய்..அம்மா…! கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி சக்தி வடிவாகினாய்..அம்மா… ! மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா… ! கண்ணின் மணியாகி கருணை உருவாகி.. கேட்கும் வரமாகுவாய்..அம்மா….! … மருதாம்புலத்து அரசி.. வலிமை கொடுக்கும் தேவி நீயே….மனதால் நினைத்து உருக…அருளைத் தருவாய் தேவி தாயே… (இன்ப வடிவாகி…) சரணங்கள் இலுப்பைமரம் அமர்ந்தவளே..இயன்ற தெல்லாம் அருள்பவளே..! கருப்பையின் குறைகளைந்து..கதிசேர வைப்பவளே..! Read more

பாவலர் கருமலைத்தமிழாழன்

நேர்காணல்  / மின்னிதழ் இவரில்லாமல் தமிழக மரபுக்கவிதை வரலாற்றை எழுத இயலாது.கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் கவிஞராக வலம்வருபவர். இவருடைய கவிதைகள் பள்ளி கல்லூரி மாணவர்களின் பாடங்களில் வைக்கப் பட்டுள்ளன. மலேசியப் பள்ளிக் கூடங்களிலும் இவரது பாடல் பாடமாக உள்ளது. தமிழாசான் தலைமை ஆசானாகப் பணி செய்து ஓய்வு பெற்ற தமிழ்ச்செம்மல். எண்ணற்ற நூல்களை எழுதியவர்.நரேந்திரன் என்ற தனது இயற்பெயரை கருமலைத்தமிழாழன் என்று மாற்றிக் கொண்ட ஐயா Read more

பூபாளம் பாடும் பரணி

நேர்காணல்  / மின்னிதழ் தினமும் தவறாமல் முகநூலில் இவரது கவிதை வரும். கடந்த 1100 நாட்களாகத் தொடர்ந்து முகநூலில் தினமும் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் அன்றைய நாளை வரவேற்றுக் கவிதைபாடுபவர். 1000 நாட்களுக்கு மேல் கவிதை எழுதியதற்காக சாதனையாளர் விருதைப் பெற்றவர். மத்திய அரசுப் பணியில் இருந்த போதும் ஓய்வின்றி ஒருநாளும் தவறாது பூபாளம் பாடிய பரணி இவர். ஆம் பரணி சுப சேகர் என்ற கவிஞரைத் தெரியாதர் இருக்க Read more

அகவை முதிர்ந்த இளந்தென்றல்

மின்னிதழ் / நேர்காணல் சந்திப்பு : பாவலர்மணி இராம வேல்முருகன் கவியுலகில், திரையுலகில், தமிழுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தைப் பெற்றவர் கவியரசு கண்ணதாசர் என்பதை அனைவரும் அறிவோம். அவருடைய பாடல்கள் பாமரனுக்கும் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக அதேநேரத்தில் சங்க இலக்கியத்துக்குச் சற்றும் குறையாத தரத்துடன் இருக்கும். அத்தகைய உணர்வை, இன்பத்தை நமக்கு இப்போது ஒருவரின் கவிதை வழங்குமேயானால் அது இவரது கவிதைதான்.இவரது எந்தவொரு கவிதையை நாம் படித்தாலும் Read more

மயிலாடுதுறையில் ஓர் இனிக்கும் தமிழர்

மின்னிதழ் / நேர்காணல் நேர்கண்டவர் பாவலர்மணி இராம வேல்முருகன் தமிழ் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளத் தகுதியுள்ள யாரை யாவது தத்தெடுத்துக் கொள்கிறது. தமிழைக் கற்றுத் தேர்ந்து தமிழால் தனது வாழ்க்கையை நடத்துபவர்களைவிட தமிழை வளர்ப்பவர்கள் பெரும்பாலும் தமிழைக் கற்காத வர்கள் என்றால் அது மிகையல்ல. தமிழால் வளர்பவர்களைவிட தொடக்கக் கல்வியைக்கூட நிறைவுசெய்யாத ஒரு வரைத் தமிழ் தெரிவுசெய்து கொண்டது வியப்புக்குரியதே. சிறுவயதில் மேடைப் பேச்சுகளைக் கேட்டதாலும் திரைப்பட வசனங்களை Read more

அமைதிப்பூங்கா இராணிலட்சுமி

மின்னிதழ் / நேர்காணல் சுதந்திரப் போராட்டக் களத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட வீரமங்கையின் பெயரைத்தாங்கிய மங்கை. குழந்தைத் தொழிலாளர்களையும் கொத்தடிமைகளையும் மீட்டு அவர்களுக்குப் புதியதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் அரசு ஊழியர். தொழிலாளர்நலத்துறையில் அலுவலர். தமிழை விரும்பிப் படித்து முதுகலைப் பட்டம் பெற்று மரபுக்கவிதைகளை யாக்கும் திறன் பெற்ற கவிஞர். ஏழைகளுக்கு அன்னமிடும் அன்னலட்சுமி. முகநூல்குழுமங்களை நேசிக்கும் புரவலர். இப்படிப்பட்ட பன்முகத் திறன் கொண்ட சகோதரி திருமதி இராணிலட்சுமி அவர்களைத்தான் நாம் Read more

தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு தமிழ்த்தென்றல்

தமிழில் இளங்கலையோ முதுகலையோ பட்டம் பெறாதவர்களே பெரும்பாலும் கவியுலகில் கோலோச்சுபவர்களாக இருக்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே! அத்தகைய ஒருவரைத்தான் இந்த மாத இதழில் நேர்காணல் செய்யவிருக்கிறோம். ஆம் இவர் நிறைய பட்டங்களைப் பெற்றிருந்தாலும் தமிழில் பட்டம் பெற்றவர் இல்லை. பணிபுரியும் துறை கல்வித்துறையாக இருப்பினும் அங்கும் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை. இவர் ஆசிரியருக்கான பட்டமும் பயிற்சியும் பெற்றிருந்தாலும் ஆசிரியராகப் பணியாற்ற வில்லை. ஆனால் தமிழ்க் கவிதைகளை யாப்பதில் முன்னணிக் கவிஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஆயிரம் விருத்தங்களை மிகக்குறுகிய காலத்தில் எழுதி நிறைவு செய்து பிரான்சு நாட்டில் இயங்கிவரும் கம்பன் கழகம் தொல்காப்பியர் இலக்கண மையம் மற்றும் பாவலர் பயிலரங்கம் வழங்கிய பாவலர் மற்றும் பாவலர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். ஆம் பாவலர் திரு. இராம வேல்முருகன் அவர்களைத்தான் சந்திக்கின்றோம்.

கம்பன் விழா

ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம், கம்பன் விழாவைச் சிறப்பாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறப்பான வர்களை அழைத்துச் சிறப்புச் செய்து விழாக்கொண்டாடுவது வழக்கம். இவ் வாண்டு கொரோனாக் காலத்தில் விழாக் கொண்டாட முடியுமா என்ற ஐயப்பாடுடன் அதிகமானவர்களை அழைக்காமல் குறைந்த எண்ணிக்கையாளருடனே விழாச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது. கம்பன் கழகத்துக்காக உழைத்த நல்லிதயம் பாவலர்ஆதிலட்சுமிவேணுகோபல் அவர்கள் மறைவை நினைவு கூறும் வகையில் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவராலும் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செய்யப்பட்டது. Read more

மதுரையில் மீண்டும் ஒரு காளமேகப் புலவர்

நேர்காணல் காளமேகப்புலவர் தமிழ்ப்புலவர்கள் வரிசையில் நீங்கா இடம் பெற்ற கவிஞர். நினைத்த மாத்திரத்தில் கவிதைகளை யாப்பதில் வல்லவர். அதுவும் கவிஞர்களுக்குச் சிரமம் எனக் கருதப்படும் வெண்பாவில் சரளமாகப் பாக்கள் வடிப்பவர். காளமேகப்புலவரைப் போலவே மதுரையில் 40 வருடங்களாக ஒருவர் பாக்கள் யாத்து அசத்தி வருகிறார். ஆம் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் இவரது கணீர்க்குரலைக் கேட்கலாம். இவரது பட்டறையில் பட்டை Read more

ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில்…

1.0 ஈழத்து நவீன கவிதை வளர்ச்சியில் அறுபதுகளளவில் முற்போக்குக் கவிதைச் செல்நெறி முகிழ்க்க ஆரம்பித்தது, எழுபதுகளிலும் தொடர்ந்தது. இந்த எழுபது காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்டு இத்தகைய கவிதை எழுதியோருள் ஒரு சாரார் குறிப்பாக முஸ்லிம் கவிஞர்கள் இஸ்லாமிய மதப்பற்றுடையவர்களாகவும் விளங்கினர். கீழைத்தேய நாடுகளிலே இது தவிர்க்க வியலாததொன்று என்ற புரிதலின்மையும், இத்தகைய கவிஞர்களின் தொகுப்புகள் வெளிவரத்தாமதமானமையும், வெளிவந்தவைகூட கிடைப்பதற்கரிதாகவிருந்தமையும் காரணமாக ஈழத்துக் கவிதை வரலாற்றில் இடம்பெறத்தவறிய கவிஞர்கள் சிலருள் Read more