ஆண்டுதோறும் பிரான்சு கம்பன் கழகம், கம்பன் விழாவைச் சிறப்பாக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சிறப்பான வர்களை அழைத்துச் சிறப்புச் செய்து விழாக்கொண்டாடுவது வழக்கம். இவ் வாண்டு கொரோனாக் காலத்தில் விழாக் கொண்டாட முடியுமா என்ற ஐயப்பாடுடன் அதிகமானவர்களை அழைக்காமல் குறைந்த எண்ணிக்கையாளருடனே விழாச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டது.

கம்பன் கழகத்துக்காக உழைத்த நல்லிதயம் பாவலர்ஆதிலட்சுமிவேணுகோபல் அவர்கள் மறைவை நினைவு கூறும் வகையில் விழாவுக்கு வந்திருந்தோர் அனைவராலும் தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செய்யப்பட்டது.

இசைமாமணி கிருபாபரணன் சிவபாதசுந்தரம் திருமதி மணியன்செல்வி இவர்களின் தமிழிசையுடன் பாவலர் பயிலரங்க மாணவ மாணவியரின் இறை வாழ்த்தும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டுப் பாவலர் நெய்தல்நாடன் வரவேற்புரையைக் கவிதை வடிவில் நிகழ்த்த விழாத்தலைமையைப் பாரிசு பார்த்தசாரதி நிகழ்த்தினார்.

ஆண்டுதோறும் தமிழுக்கு உழைத்த பெருமக்களுக்கு கம்பன் விருது அளித்து மகிழும் கம்பன் கழகம் இவ்வாண்டு பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்பாளர் திருமிகு அ. நாகராசன் அவர்களுக்கும், தமிழ் இதழியல் செல்வராகத் திருமிகு தமிழ்நெஞ்சம் அமின் அவர்களுக்கும் விருதளித்துச் சிறப்புற்றது.

கம்பன் விழாமலர் வெளியிடப் பட்டது. அழகிய வண்ணப் பக்கங்களால் அமைந்திருந்தது மிக்க சிறப்பு. மலரினைத் திருமிகு செய மாமல்லன் இலிங்கம் வெளியிடத் திருமிகு செயசீலன் பெற்றுக் கொண்டார்.

பாட்டரசர் கி. பாரதிதாசன் எழுதிய நூல்களிரண்டு வெளியீடு கண்டது. மார்கழித் திங்கள் கவிதை நூலைத் திருமிகு போர். என்செல்வம் வெளியிட முதல் நூலினைப் பாவலர் கவிப்பாவைப் பெற்றுக்கொண்டார்.

வெண்ணிலவே… வெண்ணிலவே கவிதை நூலைத் திருமிகு மீ.கிருட்டினமூர்த்தி வெளியிட முதல் நூலினைத் திருமிகு தீபன் நடராசன் பெற்றுக்கொண்டார்.

இறுதியாகப் பாட்டரசர் கி.பாரதிதாசன் அவர்கள் ‘‘ஆழ்வாரும் கம்பரும்’’ எனும் தலைப்பில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்.

நன்றியுரையுடன் விழா இனிது நிறைவுபெற்றது.

செய்தி :
நிரவி நிலவன்

கம்பன் விருது பெற்ற
தமிழ் இதழியல் செல்வர்

தமிழ்நெஞ்சம் அமின்
நன்றி நவிலல்!

கம்பரின் பெயரால் இங்கே
கவின்மிகு விருத ளித்தீர்!
விம்மிடும் நெஞ்சத் தாலே
வியத்தகு நன்றி சொல்வேன்!
எம்பெரு மானார் கம்பர்
இனிதுடன் அளித்துச் சென்ற
நம்மெழில் தமிழுக் கன்றோ
நவிலுவேன் நன்றி இன்றே!

கடல்மலை கடந்த போதும்
களிக்கிறோம் தமிழால் தானே
உடல்பல என்றபோதும்
உயிர்க்கிறோம் தமிழால் தானே
தடைபல வந்தபோதும்
தாங்குவோம் தமிழால் தானே
இடையறா நம்மி யக்கம்
இயங்குதல் தமிழால் தானே

இத்தனை தொலைவுக் கப்பால்
எம்மினம் வாழும் போதும்
அத்தனை நெஞ்சத் துள்ளும்
அருந்தமிழ் ஒன்றே வாழும்
வித்தகர் குழுமம் இந்த
வியன்றமிழ் மேடை யேற்றிச்
சொத்தெலாம் வழங்கி னாற்போல்
உளந்தொழ விருது தந்தீர்!

ஆவலாய் வரும்மா ணாக்கர்
அருந்தமிழ் பாக்கள் யாவும்
பாவலர் அரங்கின் மூலம்
பயின்றிட உதவும் ஆசான்
சேவலாய் மயிலாய் வந்து
செந்தமிழ் மொழிக்கு நல்ல
காவலாய்த் தமிழுக் கான
கவிக்கடல் பாட்டின் வேந்தர்

கூடிய பெரியோர் மற்றும்
குலவிடும் சீடர் கூட்டம்
பாடியே மனத்தை வெல்லும்
பைந்தமிழ்க் கவிக ளுக்கு
நாடியே நானும் வந்து
நல்குவேன் நன்றிப் பாக்கள்!
ஈடிலாத் தமிழைக் கொண்டே
இயம்புவேன் நன்றி நன்றி!


2 Comments

நிறைமதி நீலமேகம் · அக்டோபர் 30, 2020 at 10 h 34 min

இனிய நல்வாழ்த்துகள்..

பூங்குழலிபெருமாள் · அக்டோபர் 30, 2020 at 10 h 38 min

தகுதியானவருக்குத் தகுதியான விருது ஏற்றிவிடும் ஏணி பைந்தமிழ்த்தேனி
அயராதுழைக்கும் இதழ்ப்பணி எழுத்தாளர் தமிழ்நெஞ்சன் ஐயாவிற்கு பாராட்டுகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »