கவிதைக்கழகு இலக்கணம் – 17

தொடர் 17 அசை, சீர் , எதுகை , மோனை மற்றும் இயைபு அனைத்தும் தற்போது தங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது பா வகைகளைத் தெரிந்து கொள்வோம். பாவகை சுருக்கமாகக் காணும் போது நான்கே வகைகளில் காணலாம் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா இப்போது வெண்பாவைப் பார்ப்போம் வெண்பா என்றதுமே தங்களுக்கு ஞாபகத்தில் வர வேண்டியவை சீர் – ஈரசைச்சீர்கள் 4 காய்ச்சீர்கள் 4 தளை – இயற்சீர் மற்றும் வெண்சீர் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 16

தொடர் 16 இதுவரை வெண்டளை ( வெண்பாவுக்குரிய தளை) ஆசிரியத்தளை( ஆசிரியப்பாவுக்குரியது) இரண்டையும் பார்த்துவிட்டோம். ஏன் இவற்றைப் படிக்க வேண்டும். ஒரு மரபுப்பாடலை எழுத வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்கு வருவது அதனுடைய சீர் பிறகு அந்த சீர்களை எவ்வாறு கவிதையில் கட்டமைப்பது என்பதற்காகத்தான் தளையையும் தெரிந்து கொள்கிறோம். இப்போது பாருங்கள். மா முன் நிரை விளமுன் நேர் காய்முன் நேர் இவை வெண்பாவுக்குரிய தளைகள். நேர் முன் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 15

தொடர் 15 இப்போது வெண்பாவுக்கு உரிய சீர்களும் தளைகளும் தங்களுக்குத் தெரியும். இருந்தாலும் ஞாபகப்படுத்திப்பார்ப்போம். மா விளம் காய் இவை சீர்கள் எப்படி ஞாபகம் வைத்துக் கொள்ளலாம் ஈரசைச்சீர்கள் 4 காய்ச்சீர்கள் 4 11 21 12 22 111 211 121 221 தளைகள் இரண்டு அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்துவருவது 2 தான் 2 வந்தால் 1 தான் மூன்று அசைச்சீர்களில் 1 வந்தால் அடுத்து வருவதும் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 14

தொடர் 14 இரண்டு அசைகள் மற்றும் மூன்று அசைகள் உள்ள சீர்கள் பற்றி இப்போது தங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் சரி இந்த இரண்டு அசைச்சீர்களை வைத்துக் கொண்டு நாம் எப்படி கவிதைகளை எழுத முடியும் என்று பார்ப்போமா? அன்பைக் கலந்துநாம் அறத்தை வளர்ப்போம்// இன்முகத் தோடுநாம் என்றும் வாழ்வோம் // இந்த இரண்டடிகளைக் காணுங்கள் தேமா கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கூவிளம் தேமா தேமா அனைத்துமே ஈரசைச் சீர்கள் Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 13

தொடர் 13 அசைபிரித்தீர்களா? சரிபாருங்கள் இப்போது… வானிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் நிலவினிலே – நிரைநிரைநேர் – கருவிளங்காய் வண்ணமெலாம் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் குடியிருக்கும் – நிரைநிரைநேர் – கருவிளங்காய் வண்டுவந்து – நேர்நிரைநேர் – கூவிளங்காய் தேனெடுக்க – நேர்நிரைநேர் – கூவிளங்காய் வண்ணமலர் நேர்நிரைநேர் – கூவிளங்காய் பூத்திருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் தேனிருக்கும் – நேர்நிரைநேர் – கூவிளங்காய் கூட்டினிலே Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 12

தொடர் 12 இதுவரை ஈரசைச்சீர் களைப் பற்றிப் பார்த்தோம் இப்போது மூவசைச் சீர்களைப் பற்றிக் காணலாம். மூவசைச் சீர்கள் இரண்டு வகைப்படும் காய்ச்சீர் கனிச்சீர் காய்ச்சீர் காய்ச்சீர் என்பது நான்கு வகைப்படும் ஈரசைச் சீர்கள் நான்குடன் ஒரு நேரசைச்சீர் சேர்த்தால் அது காய்ச்சீர் எனப்படும். தேமா ஒரு நேர் அசை சீர் சேரும்பொழுது தேமாங்காய் என காய்ச்சீர் ஆக மாறும். இவ்வாறு புளிமாவுடன் ஒரு நேரசைச்சீர் சேர்ந்து புளிமாங்காய் என்று Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 11

தொடர் 11 மாச்சீர்கள் எனப்படும் தேமா மற்றும் புளிமாச் சீர்களை இதுவரைப் பார்த்தோம். இப்போது விளச்சீர்கள் எனப்படும் கூவிளம் மற்றும் கருவிளம் இரண்டையும் காண்போம். பெயர் : கூவிளம் வாய்பாடு : நேர் நிரை பாடகன் கூவிளம் கூவி்டும் மாதவம் இவற்றைப் பார்க்கும் போது ஓசை நயத்தையும் பாருங்கள். அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். பா / டகன் / பா – தனி நெடில் – நேர் டகன் – Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 10

தொடர் 10 ஈரசைச் சீர்களில் முதலாவதாக தேமா எனும் சீரைப்பார்த்தோம். இதனை ஞாபகம் வைத்துக்கொள்வது எளிது. இது இரண்டு குறில்களால் தொடங்காது குறில் + நெடிலுடன் தொடங்காது நெடிலில் தொடங்கும் நெடில் + குறிலாக வரும் நெடில் + மெய்யெழுத்துடன் வரும் குறில் + மெய்யெழுத்துடன் வரும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள் கவிதை × = கவி / தை கனாக்கள் × = கனாக் / கள் காலை √ Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 9

தொடர் – 9 இதுவரை எதுகை மோனை மற்றும் இயைபு ஆகியவற்றைப் பார்த்துள்ளோம். இத்துடன் தொடர்புடைய முரண் தொடை அந்தாதி அளபடை செந்தொடை போன்றவற்றை சமயம் வரும்போது பார்ப்போம் . இப்போது அசையையும் சீரையும் பார்ப்போம். மரபுக்கவிதை எழுத வரும் அனைவருமே யோசிப்பது இந்த அசை மற்றும் சீர்கள் பற்றித்தான். இவை ஒன்றும் நாம் பயப்படும் அளவுக்கானது அல்ல. தற்போது நாம் தெரிந்து கொள்ள தண்டு அசைகள் இரண்டே இரண்டுதான். Read more

கவிதைக்கழகு இலக்கணம் – 8

தொடர் – 8 இதுவரை 3 இயைபுகளைப் பார்த்தோம் இப்போது மற்ற 5 இயைபுகளையும் காண்போம் ஒருஉ இயைபு ஓரடியில் உள்ள நான்கு சீர்களில் ஒன்று மற்றும் நான்காம் சீர்கள் இயைபு பெற்றிருப்பின் அது ஒருஉ இயைபு எனப்படும் எடுத்துக்காட்டு  1. எழுஞாயிறின் ஒளியாயெழு தமிழைத்தினம் தொழுதேத்திடு விழுதாயிரு தமிழ்மாமலை உளமேற்றியே தொழுதேத்திடு மேற்கண்ட பாடலில் எழுக 1 மற்றும் 4 ஆம் சீர்களில் வந்துள்ளதால் ஒருஉ இயைபு ஆயிற்று Read more