கவிதை

குகன் படகு பேசுகிறது!

தமிழ் வணக்கம்

கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!

 » Read more about: குகன் படகு பேசுகிறது!  »

கவிதை

பசி

வெட்கம் என்பது
எனக்கும் உண்டு தான்..!

என் வயிறு தான்
அதை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது..
உலகமும் ஏற்காததை போல்..!

மூக்கைத் துளைக்கும்
வாசனை மிக்க விருந்துகளையா
கேட்கிறேன்..??

 » Read more about: பசி  »

கவிதை

சிவந்த மகள்

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: சிவந்த மகள்  »

கட்டுரை

கற்றல் வனப்பு

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

 » Read more about: கற்றல் வனப்பு  »

ஆன்மீகம்

இந்துக்களின் சொர்க பூமி!

பாலி (இந்தோனேசியா)

உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93 சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.

 » Read more about: இந்துக்களின் சொர்க பூமி!  »

By Admin, ago
கவிதை

காட்டழகி! என் வீட்டழகி!

நாவல் பழ நிறத்தழகி
நாயுருவிக் கண்ணழகி-நான்
ஆவல் படும் அழகெல்லாம்
அடங்கி நிற்கும் பேரழகி

சேவல்க்கோழி கொண்டையென
சிவந்திருக்கும் உதட்டழகி-உன்
பாலைப்பழச் சொல்லுக்கு
காளை மனம் ஏங்குதடி!

 » Read more about: காட்டழகி! என் வீட்டழகி!  »

கவிதை

முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!

முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!

 » Read more about: முத்தமிழறிஞர் கலைஞர் வாழியவே!  »

கவிதை

பாட்டெழுதும் பாவலன் கை

பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,

 » Read more about: பாட்டெழுதும் பாவலன் கை  »

கவிதை

சூனியப்புள்ளி

அந்த சூனியப்புள்ளிக்கு
இப்போது சில வருடங்கள்
வயதாகிறது

வளர்ந்து பருத்த அதற்கு
அற்ப ஆயுள் இருக்க
கூடாதா என நான்
கேட்டுக்கொள்கின்றேன்

ஒரு உறுதியான
நிலைத்த புள்ளியில்
வாழத்தெரிந்த அதை
பார்த்து வியக்கின்றேன்

என்னோடு வாழ்ந்து வளர்ந்து
எனக்கே போட்டியாகும்
என் நிழலென
வளரும் அதற்கும்
என் ஆயுள் வரை தான்
வயதாகும்
சந்தேகமே இல்லை

 » Read more about: சூனியப்புள்ளி  »

கவிதை

இன்னொரு அவள்

60453மாறி கால இரவொன்றில்
பிரயத்தனமின்றி சுமக்கும்
மிகையான குளிரில்

அவள் நிர்மலமான
நொடிகளை ஒவ்வொன்றாய்
கடக்கும் போது

தனிமைத் தீர்க்க வந்த
இன்னொரு அவள்

கவிதைகள் பற்றிய
கோணங்களை வட்டங்களுக்குள்
அடக்குகிறாள்

சில்லரைத்தனமான
சொற் சேர்க்கை வெறும்
பேச்சுகள் என்றும்

அகராதி மறைத்த
செறிவான பதங்கள்
கொண்டு ஆழந்த
அர்த்தங்களாயும்
சிலேடைகளாயும்
மர்மங்களாயும்
சுருக்கியும் விரித்தும்
சுவாரசியமாகவும்

புனைவதன் சிறப்பை
விபரித்துக் கொண்டே

அவள் சொல்லும் கவிதையை
நான் எழுதிக்கொண்டிருந்தேன்

முடிவில் சிறந்த கவிக்கான
பட்டத்தை நான்
வாங்கிக் கொண்டிருக்க
இன்னொரு அவளான அவள்
எனக்குள் அடங்கி
குதூகலித்துக் கொண்டிருந்தாள்

 » Read more about: இன்னொரு அவள்  »