கதை

தாடி ஏன்?

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான்.

‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ்.

 » Read more about: தாடி ஏன்?  »

By Admin, ago
கவிதை

வானம் தொடுவோம்!

விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..

கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..

பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்

கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..

 » Read more about: வானம் தொடுவோம்!  »

கட்டுரை

வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

 » Read more about: வலியப் போய் மாட்டிக்கிட்டேன்!  »

By Admin, ago
கவிதை

நட்பைத் தேடி

மூன்றெழுத்து சொர்க்கமிது,
முக்கனிகளின் சுவைபோல.
உதடுகளால் உரையாடாது.
உள்ளத்தால் ஒன்றி நிற்கும்.

துன்பத்தில் துணையாய் நிற்கும்.
துயர்நீக்கும் கோலினைபோன்று.
இனிக்கும் பொழுதுகள் தோறும்
இதயத்தை இறுக்கி அணைக்கும்.

 » Read more about: நட்பைத் தேடி  »

கதை

தெளிவுகள்

“என்ன நினக்கிறான்னு! சத்தியமா என்னால யூகம்பண்ண முடியலக்கா” இப்படித்தான் முதன்முதலில் பேசஆரம்பித்தான் பிச்சைமுத்து என்னிடம்.

முகத்தை கவனித்தேன். சிவந்துவீங்கியிருந்தது. அழுதிருப்பான் போலும். அத்தனை விரக்தி,சலிப்பு அந்தமுகத்தில்..”சாவும் வரமாட்டேங்குது எனக்கு…”

அழுதுமுடிக்கட்டும் என்று காத்திருந்தேன்.வடிகாலுக்கு பின் தெளிவு பிறக்கும்.

 » Read more about: தெளிவுகள்  »

கதை

உங்களில் ஒருத்தி

காதறுந்த மஞ்சப்பைதான் SCHOOL BAG.. அரசு நடுநிலைப்பள்ளி ஐந்தாம்வகுப்பு வரை.

பாலினப் பேதமின்றி, “இவன் அடிச்சான் டீச்சர்” “இவள்என் சிலேட் ஒடச்சுட்டா”.. இதான் அதிகபட்ச! பசங்க பொண்ணுங்க குற்றச்சாட்டா இருக்கும்..

மதியம் பெரும்பாலும் பழையசாதம்.

 » Read more about: உங்களில் ஒருத்தி  »

கவிதை

பாவாணர் வழிச்செல் நண்பா!

பாவாணர் எழுத்தும் சொல்லும்
…..பைந்தமிழை உணர்வாய்ப் போற்றும்!
பாவாணர் உரைக்கும் பாட்டின்
…..பண்ணிசைக்கப் பற்றும் நன்றாய்!
பாவாணர் எழுச்சிக் காட்டும்
…..பழம்பெருமைக் காக்க வேண்டும்!
பாவாணர் வழிச்செல் நண்பா!

 » Read more about: பாவாணர் வழிச்செல் நண்பா!  »

கவிதை

கிடைத்த ஐம்பது உரூபா

நடைபயிற்சி மேற்கொள்ளும் காலை நேரம்
—-நல்லிருட்டு விலகியொளி படரும் நேரம்
விடைகொடுத்து சோம்பலுக்கு நடந்த போது
—-விழிகள்தாம் கண்டதொரு பணத்தின் தாளை !
கடைக்கண்ணால் இருபுறமும் பார்த்த வாறு
—-கால்விரலால் எடுத்ததனைக் காணும் போது
கிடைத்தத்தாள் ஐம்பதென்று தெரிந்து கொண்டு
—-கீழ்ச்சட்டைப் பைக்குள்ளே மறைத்து வைத்தேன் !

 » Read more about: கிடைத்த ஐம்பது உரூபா  »

சிரிக்க மட்டும்

கொஞ்சம் சிரிக்கலாமா?

சுதந்திரமா சிரிங்க

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்…

முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்….

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்….

 » Read more about: கொஞ்சம் சிரிக்கலாமா?  »

By Admin, ago
கவிதை

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

 » Read more about: அன்பினால் …  »