விதையாய் விழு மண்ணில்
விருச்சயமாய் எழு விண்ணில்
தடைகளை உடைத்தெறிந்து வா..

கற்பாறைகளுக்குள்
முளைத்திருக்கும் சிறுசெடி போல
முட்டிமோதி முளைத்து வா..

பூமியின் மேற்பரப்பில்
விழுந்த விதைகள்
அடிஆழத்தின் ஆணிவேராய்

கண்களுக்கு புலப்படாமல்
காத்திருக்கும்
சிறுதுளி நீராக..

வீரத்தின் விதைநிலத்தில்
வீழ்ந்த விதைகள்
ஒருநாள் உயிர்ப்புடன் வளரும்..

மண்ணில் இருந்து
விண்ணை நோக்கி
எழுச்சியுடன் வளரும்..

காத்திருப்போம்

ஒரு துளி நீர் போதும்
விதைகள் மீண்டு எழ
எழுவோம்….

அந்த
வானம் தொட!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.