புதுக் கவிதை

இலக்கு

நேர்வழிப் பாதைகள்
திடுக்கிடும் திருப்பங்கள்
பதறவைக்கும் பள்ளங்கள்
மூச்சிரைக்கும் மேடுகள்.

ஆர்ப்பரிக்கும் ஆரவாரம்
அசைவற்ற அமைதி
கவிந்துவிட்ட இருள்
கண் பறிக்கும் ஒளி.

 » Read more about: இலக்கு  »

புதுக் கவிதை

அவலக் (குரல்) கதறல்

மியன்மார்…

மியர்மாரின் மிஞ்சி கிடக்கும்
மானிடம் நடுவில் பூத்துக்கிடக்கும்
இந்த கதறல்…

மழலையின் அழுகையை
நிறுத்த அன்னை அவள்
கொண்ட காட்சிதான்
ஒழிந்திருப்பது அன்று,

 » Read more about: அவலக் (குரல்) கதறல்  »

புதுக் கவிதை

மரபும் மாற்றமும்

ஆவி யுடற் கரண மனைத்து மொன்றாகித்
தாவித் தமிழோடுத் தவிழ்ந்திருப்பேன் – பூவுலகில்
மாற்றக் காட்டாறு மையற்றாங் கொண்டாலுஞ்
சாற்றும் மரபுக்குண்டோ சா?

வாழையடி வாழை நின்று
வண்ணத் தமிழாடை கொண்டு
வையமுள்ள வரைக்கும் வரும் மரபு – சட்ட
வரம்புகளை மீறிவிட்டா லிழிவு.

 » Read more about: மரபும் மாற்றமும்  »

கவிதை

பாரத மாதாவின் எழுச்சி மகன்!

தாயின் கருவில் தாயகம் காக்க..
உதித்து எழுந்த தலைமகனே!
தொப்புள் கொடி அறுத்து
தேசியக் கொடி உன்னை இணைக்கும் என்று
தாயின் கண்ணீர் சொன்னது
புனித பூமியில் உதித்து மேலும்
புனிதம் சேர்த்த புனிதன்…

 » Read more about: பாரத மாதாவின் எழுச்சி மகன்!  »

புதுக் கவிதை

நீறு பூத்த நெருப்பு

ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!

 » Read more about: நீறு பூத்த நெருப்பு  »

புதுக் கவிதை

சுதந்திரம்

செந்நிறக் குருதிதனை
சீதனமாய் பெற்றன்று
வெண்ணிறத்தோலுடையான்
விட்டுசென்ற பசுமை நீ…

பன்னிற மொழியுடையோர்
பாரதநிறம் சேர்த்து
கண்ணிறச் சக்கரம் சுழன்ற
காண்போரின் முத்திரை நீ…

 » Read more about: சுதந்திரம்  »

புதுக் கவிதை

அவன் என் மூத்த சகோதரன்

அவனை நான் அக்கா
என விளிப்பது அவனுக்கு பிடிக்கும்.

அவன் என் மூத்த சகோதரன்.

கொஞ்சம் கொஞ்சமாக
பெண்ணாகிக் கொண்டிருந்தான்.

படுக்கையில் விலகித்தெரிந்த
அவன் கொலுசுக் கால்களை
பார்த்துவிட்டு முதன்முதலில்
அதிர்ச்சியானவன் நான்தான்.

 » Read more about: அவன் என் மூத்த சகோதரன்  »

புதுக் கவிதை

நேற்று பெய்த மழையில்…

நேற்று பெய்த மழையில்
இன்று முளைத்த கவிதை

மழை வெவ்வேறு
காலங்களில் பெய்தாலும்
என் இறந்த காலத்தைத்தான்
ஈரமாக்கிவிட்டு போகிறது

ஒற்றைக் குடை
இருவர் பயணம்
அனாதை சாலை
சீதளக்காற்று மெல்லிய உரசல்
பகல் இரவு
புணர் பொழுது

சொர்க்கம் பற்றிய
சந்(தேகம்) தீர்ந்தது
இன்றோடு!

 » Read more about: நேற்று பெய்த மழையில்…  »

By ஆயுதா, ago
புதுக் கவிதை

மது குடிக்கும் உயிர்

மதுவுடைய பிடியினிலே
மயங்குகிற அடிமையே!
எதுகுடித்தால் இன்பமெனில்
மதுகுடித்தால் இன்பமென்பாய்;

மதுகுடிக்கும் உன்னுயிரை
மயக்கத்திலே நீயிருப்பாய்;
அதுகுடிப்பது உன்னுயிரை
அடுத்தடுத்து உம்முறவை;

இதுகுடித்து ஏப்பமிடும்
எல்லையிலாத் துன்பம்தரும்;

 » Read more about: மது குடிக்கும் உயிர்  »

புதுக் கவிதை

பிராணவாயு நீ !

சுவாசிக்கும் காற்றில்
கரியமிலவாயு நான்,
பிராணவாயு நீ!

பருகும் நீரில்
ஹைட்ரஜன் நான்,
ஆக்சிஜன் நீ!

எரியும் விளக்கில்
வெப்பம் நான்,

 » Read more about: பிராணவாயு நீ !  »