புதுக் கவிதை
ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!
நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!
சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !
காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…