மரபுக் கவிதை
பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கு அஞ்சலி
கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .
திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .
கவியுலகின் நன்முத்து
கண்மூடிக் கொண்டது ,
பொன்னுலகு தேடியே
புறப்பட்டு விட்டது .
திரையில் ஜொலித்த
தீந்தமிழ் வைரம் ,
திசைமாறிப் போனதால்
திக்கெட்டும் துயரம் .
முன்னம் …
எப்போதும் போல
இல்லா வண்ணம்
நேசிக்கின்றேன் உன்னை!
என் காதலை
உன்னிடம் சொல்வதாய் இல்லை!
என்றேனும் உணர்ந்து,
நீயாக எனை தேடும் வேளையில்
உனக்காக வழங்க
மொத்தமாக சேர்த்து வைத்து
உனக்கான முத்தங்களை!
ஒத்தையடிப் பாதை வழி
புத்தகம் சுமந்த படி
நான் போகையில் ஒற்றை மலரோடு
அத்தை மகன் வந்து நின்றான்.
தெத்துப் பல் தெரியும் வண்ணம்
புன்னகை புரிந்தான்.
பாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ?
காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!
பாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.
பசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை!…
உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன்.
» Read more about: வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்! »
கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.
» Read more about: இல்லற தர்மம் »
“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம்.
» Read more about: முக்கோண முக்குளிப்பு »
3 நிமிட சிறுகதை
“ஹாய்டா ராஜேஷ்..”
“ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..”
“என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..”
“ஓ..
» Read more about: உனக்கென இருப்பேன்… »
மௌனமே மொழியானது
உனக்கும் எனக்கும்
மந்திர விழி பேசுது
மயக்கம் கிறக்கம்
சுந்தர கவியானது
இதய இயக்கம்
சேர்ந்திட முடியாதது
வாழ்வியல் குழப்பம்
கனவினில் கூத்தாடுது
பேசாத அன்பின் நெருக்கம்
விடிந்ததும் மனம் ஏங்குது
புரியாத வார்த்தையின் விளக்கம்
உறவினில் கலந்தாயே
சிறகுகள் விரிக்க
விறகாக்கி எரிப்பாயோ
இந்த வீணையை உணராமல்
இல்லை
உலகாக்கி கேட்டு மகிழ்வாயோ
இந்த ஊமையை
சபை ஏற்றி மகிழ்வாயோ