கவிதை

எழுதத் துடிக்கும் மனசு…!

எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!

 » Read more about: எழுதத் துடிக்கும் மனசு…!  »

கவிதை

வைரமுத்தை தோற்கடிப்பேன்…

திணரவைக்கும் திமிராலே
திரும்பி பார்க்க வைத்தாய் நீ
கிறங்கடிக்கும் சிரிப்பாலே
விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ

உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே
இளையராஜா இசை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி நீபேச
கவிதை கோடி நான் கோர்த்தேன்

மாசி மாத காற்றைப்போல்
மனசுக்குள்ளே நீ வீசு
உன்னை எண்ணி உயிர்த்தேனே
ஒற்றை வார்த்தை நீ பேசு

வாசப் பூவே நீ கேட்டால்
வானில்கூட பூப்பறிப்பேன்
வாழ்வின் பொருளே உனக்காக
வைரமுத்தை தோற்கடிப்பேன்

சாடையாலே நீ சொன்னால்
சாவைகூட சாகடிப்பேன்
கைகள் கோர்க்க நீ வந்தால்
காலின் கொலுசாய் நானிருப்பேன்

 » Read more about: வைரமுத்தை தோற்கடிப்பேன்…  »

கவிதை

அன்புள்ள நண்பிக்கு

அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …

உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….

தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…

 » Read more about: அன்புள்ள நண்பிக்கு  »

கவிதை

அக்னிச்சிறகு

அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.
இந்தியாவின் முகவரி.
நம் நாட்டின்
வடக்கே இமயமலை
கிழக்கே அப்துல் கலாம்.

நடமாடிய விஞ்ஞானம்
தந்தை தெரஸா
இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.

 » Read more about: அக்னிச்சிறகு  »

கவிதை

வாலி நீ வாழி!

நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை
பாக்குச் சுண்ணாம்புடன்
நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!

ஒற்றை வரிகளில்
ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்
பாக்களில் புதைத்தவனின்
உடல்தான் புதைக்கவோ
எரிக்கவோப் பட்டிருக்கலாம்;

 » Read more about: வாலி நீ வாழி!  »

கவிதை

குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்

இரை தேடி சென்ற குருவிகள் கூட்டையும்
மரங்கொத்தி பறவையின் அலகு நுனியின் அழுத்தத்தையும்
எறும்புகள் ஊர்ந்த வழியையும்
நிழலுக்காக ஒதுங்கிய மனிதனின் ஏக்கத்தையும்
நூற்றாண்டுகளுக்கு மேல்
பிரசவித்த கோடி இலைகளையும்
லட்சம் மலர்களின் வாசங்களையும்
காய் கனிகளின் சுவைகளையும்
மண் சுமக்கயிருந்த சருகுகளுக்கான கனவுகளையும்
அந்நிலத்தின் வெற்றிடத்தையும்
மரத்தை வெட்டி சாய்த்த மரவெட்டியவனின் வேர்வையையும்தான்
உங்கள் வீட்டு முற்றத்தில் நாற்காலியாய் கிடத்தி
கோப்பையில் ஏதையோ நிரப்பி அருந்தி கொண்டிருக்கிறீர்கள்
அவையனைத்தும் என்னை நோக்கி அமர்ந்திருப்பதை
கவனிக்காதிருக்கிறீர்கள்
கவனிக்காதவரை குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்…

 » Read more about: குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்  »

கவிதை

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

 » Read more about: அன்பினால் …  »

கவிதை

பெண்மையின் முகவரியாய்!

வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!

தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,

 » Read more about: பெண்மையின் முகவரியாய்!  »

கவிதை

வெற்றிலை

எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…

பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…

நாக்கு நீட்டு மாமான்னு…

 » Read more about: வெற்றிலை  »

By Admin, ago
கவிதை

பசி

வெட்கம் என்பது
எனக்கும் உண்டு தான்..!

என் வயிறு தான்
அதை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது..
உலகமும் ஏற்காததை போல்..!

மூக்கைத் துளைக்கும்
வாசனை மிக்க விருந்துகளையா
கேட்கிறேன்..??

 » Read more about: பசி  »