பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா! அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது. அஸர் தொழுகையை நிறைவேற்றிய கையோடு பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்கள் விழாக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பாவேந்தலின் நண்பருமான கவிஞர் எழுகவி ஜெலீல் அவர்களால் அழைத்து வரப்பட்டு  விழா மண்டபத்தின் தெற்கே சுமார் இருநூறு மீட்டர் Read more

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது

மு.முருகேஷ்

தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் – ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.

கவிமாமணி வை. இராமதாசு காந்தி

மின்னிதழ் / நேர்காணல் இன்று முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அதிகமாக அறியப்படுபவர் கவிமாமணி வை. இராமதாசு காந்தி அவர்கள்.பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த புதுச்சேரியில் வாழும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றதுமே இன்முகத்தோடு சம்மதித்து வழங்கினார். அந்த பதில்களைப் பார்ப்போமே! சந்திப்பு : பொன்மணிதாசன் ஜனவரி 2022 முதல் இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் Read more

முனைவர் லட்சுமி ப்ரியா

மின்னிதழ் / நேர்காணல் பேக்கிடெர்ம் டேல்ஸ் நிறுவனம் இன்று தமிழில் கதைகளோ, கவிதைகளோ எழுத எண்ணி, அதை நூலாக்கும் வழி தெரியாது தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எழுத்துத் துறையில் நல்லதொரு பாதையைக் காட்டும் சிறப்பான பணியினை ஆற்றிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டின் கொடுந்தொற்றுக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 150 நூல்களை வெளியிட்டு, பல கவிஞர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப் படுத்தியிருக்கிறது.. இதன் வளர்ச்சியில் நிர்வாகியாக இருந்து முன்னெடுத்துச் செல்லும் முனைவர் லட்சுமிப்ரியா Read more

கவிக்கோ துரை வசந்தராசன்

மின்னிதழ் / நேர்காணல் பாவேந்தர் பரம்பரை விழுது என புலவர் புலமைப்பித்தன் அவர்களால் அடையாளப் படுத்தப் பட்டவர் கவிக்கோ துரைவசந்தராசன் அவர்கள். தந்தைப் பெரியார் அண்ணா கலைஞர் கொள்கைவழி ஈர்க்கப்பட்டு இன்றும் புரட்சிகரமான எழுத்துகளால் தன்னை நிலை நாட்டிக்கொண்டிருப்பவர்.தாம் வசிக்கும் மாதவரம் பால்பண்ணைப் பகுதியில் 1984ல் தொடங்கப்பட்ட பண்ணைத் தமிழ்ச்சங்கம் மூலம் எண்ணற்ற இலக்கியவாதிகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது எழுத்துகளை ஏந்தாத ஏடுகளே இல்லை எனலாம். பல்வேறு விருதுகள் புதுச்சேரி Read more

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென்.
சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்…
பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது.
அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும்
கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

கவிஞர் விக்டர்தாஸ் நேர்காணல்

மின்னிதழ் / நேர்காணல் ஆளும் வளர்ந்தவர் அறிவும் வளர்ந்தவர் அன்பெனும் தேசத்தில் நாளும் வளர்ந்தவர் தாளும் கோலும் கையில் கிடைத்தால் தாங்கா திவரின் தமிழ் விளையாட்டு ஆளிவர் அனுதினம் ஆக்கிடும் படைப்பு ஆகா சத்தின் சூரிய வெளுப்பு பாலும் கசக்கும் பழமும் புளிக்கும் பாயிவர் எழுதினால் பக்கங்கள் இனிக்கும்! உருவங் கறுப்பு உள்ளம் வெளுப்பு உயிர்திடும் பொழுதிவர் உயரிய சிரிப்பு கருவ மறியா கவிஞர் விக்டர்தாஸ் காலக் கிருபையின் கனத்தப் பிறப்பு Read more

சிங்களப்பாடகி ஓலு வசந்தி

மின்னிதழ் / நேர்காணல் இலங்கைப் பாடகர்கள் வரிசையில் தனக்கென ரசிகர்கள் கூட்டமொன்றையும் ஈர்த்தெடுத்து வலம் வரும் ஓலு வசந்தி ஒரு சிங்கள மொழிப்பாடகியாக மட்டுமல்லாமல் ஒரு ஓவியராகவும் மிளிர்கிறார். பன்முகத் திறமைகள் கொண்ட அவர், தமிழ்நெஞ்சத்துக்காக மனம் திறந்து தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் தருணம். வாருங்கள் ஓலு வசந்தியை அறிந்துகொள்வோம்… நேர்கண்டவர் வஃபீரா வஃபி அக்டோபர் 2021 இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் Read more

பாவலர் வள்ளிமுத்து நேர்காணல்

எல்லோரும் கொரானா தொற்று காலத்தில் உள்ளோம். அதனால் உங்க ளுக்கே உள்ள தொனியில் கவித்துவத் தோடு மக்களுக்கு ஒரு அறிவுரை வழங்குங்களேன்.?

வல்லவனுக்கு வல்லவனை இயற்கை உரு வாக்கிக் கொண்டே இருக்கும்..ஆம் பெரிய உயிருக்கும் சிற்றுயிருக்கும் இடையேயான போராட்டமே உலகியல்..

அளவு மீறிப் பெருகும் உயிர்களை இயற்கையே அழித்துச் சமநிலைப் படுத்திவிடும்..இந்த வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணியிரிகளுக்கும் மனிதனுக்குமான போராட்டம் இப்போதல்ல காலகாலமாக நடப்பதுதான்..

பாவலர் வையவன்

மின்னிதழ் / நேர்காணல் “எமக்குத் தொழில் கவிதை; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பான் பாரதி. ஆசிரியப் பணி, ஆனைமுத்து ஐய்யாவுடன் இயக்கப் பணி என தீவிரமாக இயங்கிய வையவன் அப்பணிகளுக்கிடையே அதன் நடுவே பத்து கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அறம் சார்ந்த நேர்மையான வாழ்வு என்பது இலட்சியம். எந்த வெளிச்சத்தையும் போலிமையையும் விரும்பாத பாவலர் வையவன் ‘மனத்துக்கண் மாசிலன்’ என்பதை தன் நெறியாகக் கொண்டவர். தமிழ் நெஞ்சம் இதழுக்காக அவரை நேர்காணல் Read more