மின்னிதழ் / நேர்காணல்
இன்று முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அதிகமாக அறியப்படுபவர் கவிமாமணி வை. இராமதாசு காந்தி அவர்கள்.பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த புதுச்சேரியில் வாழும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றதுமே இன்முகத்தோடு சம்மதித்து வழங்கினார். அந்த பதில்களைப் பார்ப்போமே!
சந்திப்பு : பொன்மணிதாசன்
வணக்கம் ஐயா
முகநூலில் இன்று எழுதிவரும் பலரில் குறிப்பிடத் தக்கவர் தாங்கள். ஏறத்தாழ பத்துக்கு மேற்பட்ட சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். அந்நூல் களில் மிகச்சிறந்த நூல் எது? அது ஏன்?
1. சிலம்பு கூறும் சீரிய அறம்
2. ஞானச்சுடர் மணிமேகலை
சங்க காலத்தமிழில் இளங்கோவடிகள் சாத்தனார் இயற்றிய சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை நூல்களை எளிமைப் படுத்தி இன்றைய வாசிப்பிற்கு மரபு கவிதைகளாக அழகு குறையாமல் செய்த உழைப்புதான்
ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு செய்யவேண்டியது என்ன?
வாசகனுக்கு பிடித்த எளிய நடை கருத்தாழம் சொல்லழகு இவைகளை எழுத்தாளன் மனத்தில் வைத்து படைப்பை வழங்க வேண்டும் .
தாங்கள் வள்ளலார் மரபுவழி பின்பற்றி நடப்பவர். திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் தங்களுக்குப் பிடித்தது அவர் எழுதிய கவிதைகளா?அவர் சிவனிடம் கொண்டிருந்த பக்தியா?
அவரின் எளிமையான நடை பாடலில் அவர்கையாண்ட புதிய யுத்திகள். அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்சோதி என்ற உலகத்தில் யாவரும் வழிபடும் பொதுவான தெய் வத்தையே வழிபாட்டிற்கு காட்டிச் சென்றது
தற்கால இலக்கியச் சுவை. பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக இல்லை என்பது எனது கருத்து.தங்களின் கருத்து?
உண்மைதான் பாடல்களும் உரை நடையிலும் பழமை என்பது இனி யாராலும் முறியடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. உரைநடையில் கல்கியின் நடைக்கு ஈடு இல்லைதானே .
உங்கள் பள்ளி நாட்கள் பசுமையாக நினைவில் நிற்பதுஎது?
இன்னும் நன்றாக படித்திருக்க வேண்டுமென்ற எண்ணமே.
பள்ளிக்காலங்களில் உங்களிட மிருந்த சிறந்த பழக்க மொன்றை சொல்லுங்களேன்?
சிறு வயதிலேயே திருப்புகழை மனப்பாடம் செய்ததே நல்ல பழக்கம்.
மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் இவற்றில் எது வாசகன் மனதில் தங்கும்? எதனால்?
மரபே! மரபின் ஓசைகளின் மூலம் மனத்தில் பதியும். சொல்வதற்கு எளிமை நம் முன்னோர் வழி இது.
ஒரு படைப்பாளனுக்கு அரசியல் சாத்தியப்படுமா?
சாத்தியப் படாது. கவிஞனுக்கு மென்மையான உள்ளம். கண்ணதாசனே அதில் தோற்று போனதை உதராணமாக கொள்ளலாம்
தற்கால படைப்பாளர்களில் தங்க ளைக் கவர்ந்தவர் யார்?
உதயணன் என்ற வரலாற்று நாவலாசிரியர் என் நண்பர். மற்றும் உரையாசிரியர் கவிஞர் முத்து இராமமூர்த்தி காஞ்சிபுரம்.
ஒரு கவிதையை எழுத மூடு வேண்டும் என்கிறார்களே. தங்கள் அனுபவம்?
அப்படியொன்றும் இல்லை எந்த சூழலிலும் எழுதலாம் .
எப்படியும் இதில் வெற்றியடைந்தே தீருவது என்று ஏதேனும் லட்சியமுண்டா. அதை வெற்றிகாண வழி கண்டீர்களா?
ஆம் சிலப்பதிகாரம் என்ற சங்ககால நூலை இந்த நூற்றாண்டிற்கு தகுந்தவாறு படைத்து அறிஞர்களின் பாராட்டு பெற்ற நினைத்தேன் வெற்றியும் அடைந்தேன் அதில்.
ஒரு ஆரம்பகால படைப்பாளிக்கு தங்களின் வழிகாட்டல் என்ன?
நூல்கள் ஆயிரம் ஆயிரம் படித்து அதன்மூலம் ஏற்படும் தெளிவு. பிறகு ஒரு படைப்பாளியாக வர ஒரு வாய்ப்பு
தாங்களும் தமிழ்நெஞ்சம் வாசகர் களில் ஒருவர் என்பதில் பெருமையடைகிறோம்.தமிழ்நெஞ்சம் பொன்விழா காண்கிறது.தமிழ்நெஞ்சத்தைப் பற்றிய ஒரு கருத்துரை தங்களின் பார்வையில்…
ஒரு கவிஞனை உலகறிய செய்ய எடுக்க இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் சிறந்த ஏடு. நண்பரின் தொண்டு வாழ்க வளர்க.