மின்னிதழ் / நேர்காணல்

இன்று முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அதிகமாக அறியப்படுபவர் கவிமாமணி வை. இராமதாசு காந்தி அவர்கள்.பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த புதுச்சேரியில் வாழும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றதுமே இன்முகத்தோடு சம்மதித்து வழங்கினார். அந்த பதில்களைப் பார்ப்போமே!

சந்திப்பு : பொன்மணிதாசன்

ஜனவரி 2022 முதல் இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
ஜனவரி 2022 இரண்டாவது இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

வணக்கம் ஐயா

முகநூலில் இன்று எழுதிவரும் பலரில் குறிப்பிடத் தக்கவர் தாங்கள். ஏறத்தாழ பத்துக்கு மேற்பட்ட சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். அந்நூல் களில் மிகச்சிறந்த நூல் எது? அது ஏன்?

1. சிலம்பு கூறும் சீரிய அறம்
2. ஞானச்சுடர் மணிமேகலை
சங்க காலத்தமிழில் இளங்கோவடிகள் சாத்தனார் இயற்றிய சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை நூல்களை எளிமைப் படுத்தி இன்றைய வாசிப்பிற்கு மரபு கவிதைகளாக அழகு குறையாமல் செய்த உழைப்புதான்

இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வாங்கிய கைவினைக் கலைஞர் முனுசாமியுடன்

ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு செய்யவேண்டியது என்ன?

வாசகனுக்கு பிடித்த எளிய நடை கருத்தாழம் சொல்லழகு இவைகளை எழுத்தாளன் மனத்தில் வைத்து படைப்பை வழங்க வேண்டும் .

தாங்கள் வள்ளலார் மரபுவழி பின்பற்றி நடப்பவர். திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் தங்களுக்குப் பிடித்தது அவர் எழுதிய கவிதைகளா?அவர் சிவனிடம் கொண்டிருந்த பக்தியா?

அவரின் எளிமையான நடை பாடலில் அவர்கையாண்ட புதிய யுத்திகள். அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்சோதி என்ற உலகத்தில் யாவரும் வழிபடும் பொதுவான தெய் வத்தையே வழிபாட்டிற்கு காட்டிச் சென்றது

ஏ பீம்சிங் மகன் பி லெனின் அவர்களுடன்
பூம்புகாரில் துணைவியாருடன்
புதுச்சேரி தொலைக்காட்சி நிகழ்வொன்றில்

தற்கால இலக்கியச் சுவை. பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக இல்லை என்பது எனது கருத்து.தங்களின் கருத்து?

உண்மைதான் பாடல்களும் உரை நடையிலும் பழமை என்பது இனி யாராலும் முறியடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. உரைநடையில் கல்கியின் நடைக்கு ஈடு இல்லைதானே .

உங்கள் பள்ளி நாட்கள் பசுமையாக நினைவில் நிற்பதுஎது?

இன்னும் நன்றாக படித்திருக்க வேண்டுமென்ற எண்ணமே.

பள்ளிக்காலங்களில் உங்களிட மிருந்த சிறந்த பழக்க மொன்றை சொல்லுங்களேன்?

சிறு வயதிலேயே திருப்புகழை மனப்பாடம் செய்ததே நல்ல பழக்கம்.

மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் இவற்றில் எது வாசகன் மனதில் தங்கும்? எதனால்?

மரபே! மரபின் ஓசைகளின் மூலம் மனத்தில் பதியும். சொல்வதற்கு எளிமை நம் முன்னோர் வழி இது.

கவிஞர் பிறைசூடன் அவர்களுடன் நூல்வெளியீட்டு விழாவில்
புதுச்சேரி அமைச்சர் க.லட்சுமிநாராணன் அவர்களுடன்
சிலம்பு கூறும் சீரிய அறம் நூல்வெளியீட்டு விழாவில்

ஒரு படைப்பாளனுக்கு அரசியல் சாத்தியப்படுமா?

சாத்தியப் படாது. கவிஞனுக்கு மென்மையான உள்ளம். கண்ணதாசனே அதில் தோற்று போனதை உதராணமாக கொள்ளலாம்

தற்கால படைப்பாளர்களில் தங்க ளைக் கவர்ந்தவர் யார்?

உதயணன் என்ற வரலாற்று நாவலாசிரியர் என் நண்பர். மற்றும் உரையாசிரியர் கவிஞர் முத்து இராமமூர்த்தி காஞ்சிபுரம்.

ஒரு கவிதையை எழுத மூடு வேண்டும் என்கிறார்களே. தங்கள் அனுபவம்?

அப்படியொன்றும் இல்லை எந்த சூழலிலும் எழுதலாம் .

எப்படியும் இதில் வெற்றியடைந்தே தீருவது என்று ஏதேனும் லட்சியமுண்டா. அதை வெற்றிகாண வழி கண்டீர்களா?

ஆம் சிலப்பதிகாரம் என்ற சங்ககால நூலை இந்த நூற்றாண்டிற்கு தகுந்தவாறு படைத்து அறிஞர்களின் பாராட்டு பெற்ற நினைத்தேன் வெற்றியும் அடைந்தேன் அதில்.

ஒரு ஆரம்பகால படைப்பாளிக்கு தங்களின் வழிகாட்டல் என்ன?

நூல்கள் ஆயிரம் ஆயிரம் படித்து அதன்மூலம் ஏற்படும் தெளிவு. பிறகு ஒரு படைப்பாளியாக வர ஒரு வாய்ப்பு

தாங்களும் தமிழ்நெஞ்சம் வாசகர் களில் ஒருவர் என்பதில் பெருமையடைகிறோம்.தமிழ்நெஞ்சம் பொன்விழா காண்கிறது.தமிழ்நெஞ்சத்தைப் பற்றிய ஒரு கருத்துரை தங்களின் பார்வையில்…

ஒரு கவிஞனை உலகறிய செய்ய எடுக்க இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் சிறந்த ஏடு. நண்பரின் தொண்டு வாழ்க வளர்க.

மன்னர் மன்னன் அவர்களிடம் புரட்சிக்கவி விருது பெற்றபோது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

மின்னிதழ்

நிந்தவூர் உஸனார் ஸலீம்

இலங்கயில் மீன் பாடும் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூரில் பிறந்து , வளர்ந்து, வாழ்ந்து வரும் பிரபலமான பல்துறை ஆளுமைகள் நிறைந்த நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை “தமிழ் நெஞ்சம்” நூலுக்காக நேர்காணல் செய்வதில் அகம் மகிழ்கிறேன் இவரது கை எழுத்துக்கள் அச்சில் வார்த்தது போல் அழகாக இருப்பது இறைவன் இவருக்கு கொடுத்த அருள் என்றே கூறலாம்.இலங்கை நாட்டில் கலை இலக்கிய துறையில் கூடிய ஆர்வாளர்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்திலிருந்து விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் நிந்தவூர் உஸனார் ஸலீம் அவர்களை அன்போடு வரவேற்றுக் கொண்டு வினாக்களுக்கு வருகிறேன்.

 » Read more about: நிந்தவூர் உஸனார் ஸலீம்  »

நேர்காணல்

எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்

இலக்கிலக்கிய உலகில் வலுவான எழுத்துத் திறனோடு, அனுபவங்களை உணர்வு மாறாமல் எழுதும் வித்தையோடு வலம் வந்து கொண்டிருக்கும் திரு கி இரகுநாதன் அவர்களுக்கு என் முதல் வணக்கம்.

இனிய வணக்கம் விஜிம்மா.

 » Read more about: எண்ணங்கள் வளமானால் எழுத்துகள் வசீகரமாகும்  »

நேர்காணல்

தேசமான்ய பாரா தாஹீர்

பிரபல எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசேவையாளருமான மாவனல்லை பாரா தாஹீர் உடனான நேர்காணலோடு இவ்விதழில் உங்களை சந்திக்கிறோம்.
இலக்கியத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி இன்று வரை தொடர்ந்து இலக்கியத்திற்குப் பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கும் இவர் நூற்றுக்கணக்கான கவிதைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார்.  » Read more about: தேசமான்ய பாரா தாஹீர்  »