மின்னிதழ் / நேர்காணல்

இன்று முகநூலிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் அதிகமாக அறியப்படுபவர் கவிமாமணி வை. இராமதாசு காந்தி அவர்கள்.பாரதியும் பாரதிதாசனும் வாழ்ந்த புதுச்சேரியில் வாழும் இவர் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஐயாவிடம் தமிழ்நெஞ்சத்திற்கு பேட்டி என்றதுமே இன்முகத்தோடு சம்மதித்து வழங்கினார். அந்த பதில்களைப் பார்ப்போமே!

சந்திப்பு : பொன்மணிதாசன்

ஜனவரி 2022 முதல் இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்
ஜனவரி 2022 இரண்டாவது இதழை பதிவிறக்கம் (download) செய்ய மேற்காணும் இதழ் அட்டைப்படத்தில் டச் அல்லது கிளிக் செய்யவும்

வணக்கம் ஐயா

முகநூலில் இன்று எழுதிவரும் பலரில் குறிப்பிடத் தக்கவர் தாங்கள். ஏறத்தாழ பத்துக்கு மேற்பட்ட சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளீர்கள். அந்நூல் களில் மிகச்சிறந்த நூல் எது? அது ஏன்?

1. சிலம்பு கூறும் சீரிய அறம்
2. ஞானச்சுடர் மணிமேகலை
சங்க காலத்தமிழில் இளங்கோவடிகள் சாத்தனார் இயற்றிய சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை நூல்களை எளிமைப் படுத்தி இன்றைய வாசிப்பிற்கு மரபு கவிதைகளாக அழகு குறையாமல் செய்த உழைப்புதான்

இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வாங்கிய கைவினைக் கலைஞர் முனுசாமியுடன்

ஒரு எழுத்தாளன் வாசகனுக்கு செய்யவேண்டியது என்ன?

வாசகனுக்கு பிடித்த எளிய நடை கருத்தாழம் சொல்லழகு இவைகளை எழுத்தாளன் மனத்தில் வைத்து படைப்பை வழங்க வேண்டும் .

தாங்கள் வள்ளலார் மரபுவழி பின்பற்றி நடப்பவர். திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானிடம் தங்களுக்குப் பிடித்தது அவர் எழுதிய கவிதைகளா?அவர் சிவனிடம் கொண்டிருந்த பக்தியா?

அவரின் எளிமையான நடை பாடலில் அவர்கையாண்ட புதிய யுத்திகள். அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் அருட்பெருஞ்சோதி என்ற உலகத்தில் யாவரும் வழிபடும் பொதுவான தெய் வத்தையே வழிபாட்டிற்கு காட்டிச் சென்றது

ஏ பீம்சிங் மகன் பி லெனின் அவர்களுடன்
பூம்புகாரில் துணைவியாருடன்
புதுச்சேரி தொலைக்காட்சி நிகழ்வொன்றில்

தற்கால இலக்கியச் சுவை. பழங் கால இலக்கியங்களுக்கு நிகராக இல்லை என்பது எனது கருத்து.தங்களின் கருத்து?

உண்மைதான் பாடல்களும் உரை நடையிலும் பழமை என்பது இனி யாராலும் முறியடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. உரைநடையில் கல்கியின் நடைக்கு ஈடு இல்லைதானே .

உங்கள் பள்ளி நாட்கள் பசுமையாக நினைவில் நிற்பதுஎது?

இன்னும் நன்றாக படித்திருக்க வேண்டுமென்ற எண்ணமே.

பள்ளிக்காலங்களில் உங்களிட மிருந்த சிறந்த பழக்க மொன்றை சொல்லுங்களேன்?

சிறு வயதிலேயே திருப்புகழை மனப்பாடம் செய்ததே நல்ல பழக்கம்.

மரபுக் கவிதைகள் புதுக்கவிதைகள் இவற்றில் எது வாசகன் மனதில் தங்கும்? எதனால்?

மரபே! மரபின் ஓசைகளின் மூலம் மனத்தில் பதியும். சொல்வதற்கு எளிமை நம் முன்னோர் வழி இது.

கவிஞர் பிறைசூடன் அவர்களுடன் நூல்வெளியீட்டு விழாவில்
புதுச்சேரி அமைச்சர் க.லட்சுமிநாராணன் அவர்களுடன்
சிலம்பு கூறும் சீரிய அறம் நூல்வெளியீட்டு விழாவில்

ஒரு படைப்பாளனுக்கு அரசியல் சாத்தியப்படுமா?

சாத்தியப் படாது. கவிஞனுக்கு மென்மையான உள்ளம். கண்ணதாசனே அதில் தோற்று போனதை உதராணமாக கொள்ளலாம்

தற்கால படைப்பாளர்களில் தங்க ளைக் கவர்ந்தவர் யார்?

உதயணன் என்ற வரலாற்று நாவலாசிரியர் என் நண்பர். மற்றும் உரையாசிரியர் கவிஞர் முத்து இராமமூர்த்தி காஞ்சிபுரம்.

ஒரு கவிதையை எழுத மூடு வேண்டும் என்கிறார்களே. தங்கள் அனுபவம்?

அப்படியொன்றும் இல்லை எந்த சூழலிலும் எழுதலாம் .

எப்படியும் இதில் வெற்றியடைந்தே தீருவது என்று ஏதேனும் லட்சியமுண்டா. அதை வெற்றிகாண வழி கண்டீர்களா?

ஆம் சிலப்பதிகாரம் என்ற சங்ககால நூலை இந்த நூற்றாண்டிற்கு தகுந்தவாறு படைத்து அறிஞர்களின் பாராட்டு பெற்ற நினைத்தேன் வெற்றியும் அடைந்தேன் அதில்.

ஒரு ஆரம்பகால படைப்பாளிக்கு தங்களின் வழிகாட்டல் என்ன?

நூல்கள் ஆயிரம் ஆயிரம் படித்து அதன்மூலம் ஏற்படும் தெளிவு. பிறகு ஒரு படைப்பாளியாக வர ஒரு வாய்ப்பு

தாங்களும் தமிழ்நெஞ்சம் வாசகர் களில் ஒருவர் என்பதில் பெருமையடைகிறோம்.தமிழ்நெஞ்சம் பொன்விழா காண்கிறது.தமிழ்நெஞ்சத்தைப் பற்றிய ஒரு கருத்துரை தங்களின் பார்வையில்…

ஒரு கவிஞனை உலகறிய செய்ய எடுக்க இது போன்ற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் சிறந்த ஏடு. நண்பரின் தொண்டு வாழ்க வளர்க.

மன்னர் மன்னன் அவர்களிடம் புரட்சிக்கவி விருது பெற்றபோது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »