திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 41

பாடல் – 41 அலந்தார்க்கொன் றீந்த புகழும் துளங்கினுந் தன்குடிமை குன்றாத் தகைமையும் – அன்போடி நாள்நாளு நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) அலந்தார்க்கு – (வறுமையால்) துன்பப்பட்டு வந்தவர்கட்கு, ஒன்று – (அவர் விரும்பும்) ஒரு பொருளை, ஈந்த புகழும் – ஈந்ததனாலாகிய இசையும்; துளங்கினும் – (வறுமை முதலிய வற்றால்) தளர்ந்த காலத்தும். தன் குடிமை – தன் குடிப்பிறப்புக்குத் தகுந்த ஒழுக்கம், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 40

பாடல் – 40 வெகுளி நுணுக்கம் விறலு மகளீர்கட் கொத்த வொழுக்க முடைமையும் – பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலும் இம்மூன்றுந் தொல்லறி வாளர் தொழில். (இ-ள்.) வெகுளி – (தம் இடத்து எழுந்த) சினத்தை, நுணுக்கும் – சுருங்கச் செய்யும், விறலும் – வலிமையும்; மகளீர்கட்கு – பெண்கட்கு, ஒத்த – இசைந்த, ஒழுக்கம் – நடையை, உடைமையும் – உடையரா யிருத்தலும்; பாத்து உண்ணும் – பகுத்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 39

பாடல் – 39 புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டீர்த் தோய்தல் மலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் – சொலைமுனிந்து பொய்ம்மயக் கஞ்சூதின் கண்தங்கல் இம்மூன்றும் நன்மையி லாளர் தொழில். (இ-ள்.) புலை – இழி தன்மையாடு, மயக்கம் – கலத்தலாவது, பொருட் பெண்டீர் – பொருளை விரும்பி நிற்கும் வேசியரை, வேண்டி – விரும்பி, தோய்தல் – கூடுதலாம்; கலம் மயக்கம் – பிறர் எச்சிற் கலத்தோடு கலத்தலாவது, கள் உண்டு – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 38

பாடல் – 38 தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் – முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ் செல்வ முடைக்கும் படை. (இ-ள்.) தன்னை – ஒருவன் தன்னை, வியந்து – (தானே) நன்கு மதித்து, தருக்கலும் – அகங்கரித்தலும்; தாழ்வு இன்றி – அடக்கம் இல்லாமல், கொன்னே – வீணாக, வெகுளி – சினத்தை, பெருக்கலும் – பெருகச் செய்தலும்; முன்னிய – கருதிய, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 37

பாடல் – 37 குறளையுள் நட்பளவு தோன்றும் உறலினிய சால்பினிற் றோன்றுங் குடிமையும் – பால்போலுந் தூய்மையுட் டோன்றும் பிரமாணம் இம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. (இ-ள்.) குறளையுள் – பொருட்சுருக்கத்தினால், நட்பு அளவு – ஒருவன் நட்பின் எல்லை, தோன்றும் – காணப்படும்; உறல் இனிய – பொருந்துதற்கு இனிய, சால்பினில் – (நற்குணச் செய்கைகளின்) நிறைவில், குடிமை – உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் – விளங்கும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 36

பாடல் – 36 ஊனுண் டுயிர்கட் கருளுடையே மென்பானுந் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானுங் தாமுறு வேள்வியிற் கொல்வானும் இம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு. (இ-ள்.) ஊன் உண்டு – ஒன்றின் மாமிசத்தைத் தின்று, உயிர்கட்கு – உயிர்களிடத்தில், அருள் உடையேம் – தயவுடையோம், என்பானும் – என்று சொல்வானும்; தான் உடன்பாடு இன்றி – தான் (யாதொரு முயற்சிக்கும்) உடன்படாமல், வினை ஆக்கும் – ஊழ் (எல்லாம்) செய்யும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 35

பாடல் – 35 முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை இன்றி மயலறுப்பான் இம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். (இ-ள்.) முந்நீர் – கடலில், திரை – அலைபோல, எழுந்து (தன்மனம்) எழுந்து, இயங்கா – அலையாத, மேதையும் – அறிவுடையவனும்; நுண் – நுட்பமாகிய, நூல் – சிந்தனையினாலும், பெரும் கேள்வி – மிகுதியாகிய கேள்வியினாலும், நூல்கரை – நூல்களின் முடிவை, கண்டானும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 34

பாடல் – 34 மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து முறைநிலை கோடா அரசுஞ் – சிறைநின்று அலவலை இல்லாக் குடியும்இம் மூவர் உலகம் எனப்படு வார். (இ-ள்.) மூன்று கடன் – மூவருக்குஞ் செய்யுங் கடன்களை, கழித்த – செய்து முடித்த, பார்ப்பானும் – அந்தணனும்; ஓர்ந்து – தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் (அக்குற்றத்தை) நாடி; முறைநிலை – நீதி நிலையில், கோடா – வழுவாத, அரசும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 33

பாடல் – 33 கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் – வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்பும்இம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (இ-ள்.) கோல் அஞ்சி – (தன்) செங்கோலைப் பயந்து, வாழும் குடியும் – வாழ்கின்ற குடியும்; குடிதழீஇ – குடிகளைத் தழுவி, ஆலம் வீழ்போலும் – ஆலமரத்தின் விழுதைப்போல் (தாங்கவல்ல,) அமைச்சனும் – மந்திரியும், வேலின் – வேலினிடத்து, கடைமணி போல் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 32

பாடல் – 32 நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை – நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலும் இம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன். (இ-ள்.) மொழி நோக்கி – (நூல்களில்) சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் – நுட்பமாகிய பொருள்களை, கொளலும் – கொள்ளுதலும்; நூற்கு – நூல்களுக்கு, ஏலா – தகாத. வெண்மொழி – பயனற்ற சொற்களை, வேண்டினும் – பிறர் விரும்பினாலும், சொல்லாமை – Read more