தொடர் 20

ஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா ? அல்லது தொடர் அடியாக அமைப்பதா ? இரண்டில் எது சிறந்தது ?

பொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..

சமயத்தில் தொடர் அடியாக அமைய நேரிடுவதும் உண்டு. அதனை பெரும்பாலும் முற்றுப்பெற்ற அடியாக மாற்றிட முயலுங்கள். தவறும் பட்சத்தில் இருக்கட்டும். ஆனால் முதல் இரண்டு அடிகளில் முதல் அடியானது தொடர் அடியாக நீளும் போது இரண்டாவது அடியில் அதனை முற்றுப் பெற செய்து விடுங்கள். ஈற்றடியை தனி அடியாக காட்டுங்கள். அதே போல முதல் அடி நிறைவு பெற்ற அடியாக அமைந்து, இரண்டாவது அடி தொடர் அடியாக அமைய நேரிட்டால்… ஈற்றடியில் அதனை முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்து விட வேண்டும்.

கவிதைகளின் போக்கிற்கு தேவையான படி வார்த்தைகளை நாம் வடிவமைத்தலே சிறப்பு.

மனைவியின் மடியில்
தலை சாய்த்தேன் வந்து போகிறது
அம்மாவின் ஞாபகம்.

  • ஆ.உமாபதி

ஆனந்த சயனத்தில்
வீதியின் ஓரத்தில் கிடந்தார்.
ஓவியமாய் கடவுள்.

  • யுவபாரதி கந்தப்பூக்கள்

இவைகள் முதலடி தொடர் அடியாக எழுதப்பட்டு, இரண்டாவது அடியில் முற்று பெற்று விடுகிறது.

மாடியில் நிலாச்சோறு
தீர்ந்து போனதென்னவோ
இரவு மட்டும்

  • கு.அ.தமிழ் மொழி

என்னப் பிரச்சனை..?
விளக்கினில் மாயும்
விட்டில்கள்..!

யார் தீட்டியது.
தூரிகையில்லாமல்
வானில்..!

இவ்விரண்டும் எனது ஹைக்கூக்கள். இதில் இரண்டாவது அடியை தொடர் அடியாக கையாண்டிருப்பதைக் காணலாம்.

இதை தவிர்த்து ஈற்றடியையும் தொடர் வார்த்தையாக நிறைவு செய்யவும் ஹைக்கூவில் வழி உண்டு. இதை கவனியுங்கள்..

பஷீர் வீட்டு
முருங்கைக் கீரை
மாரியாத்தா கூழுக்கு..!

  • கா.ந.கல்யாணசுந்தரம்

பழுத்த பழம்
காயாய் மாறி வருகிறது
தென்னை மரத்தில்..!

  • ரசிகுணா

ஆக, ஹைக்கூவில் தொடரும் வார்த்தைகளைக் கொண்டும் ஹைக்கூவின் அடிகள் அமையும்..அமைக்கலாம். தவறில்லை.

ஆனால்.. பெரும்பாலும் நிறைவாக அமையும் அல்லது முற்றுப் பெறும் வார்த்தைகளைக் கொண்டு ஹைக்கூ வடிவமைப்பதே சிறந்தது .

எனவே, ஒரு ஹைக்கூவில் அடிகளை தொடர் அடியாகவோ, முற்றுப் பெற்ற அடியாகவோ தீர்மானிப்பது கவிதைகளே. எது கவிதைக்கு அழகையும், சிறப்பையும் தருகின்றதோ அதனை அங்கு கையாளலாம்.

அடுத்து ஹைக்கூவில் மகளிரின் பங்கு..

இன்னும் வரும்..

 முன்தொடர் 19


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.