தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் ! சாதியால் நீ கூடிப்போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்மதமே தேடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்னூரார் நாடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! “தமிழென்ன தருமென் கின்றாய் ?” “தமிழ்க்கூட்டம் அறிவு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் நட்பு கூட்டும் ! தமிழ்க்கூட்டம் அன்பு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் வாழ்க்கை பேசும் ! தமிழ்க்கூட்டம் தவறை Read more

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில் நெஞ்சையள்ளும் பேரழகில் கருஞ்சாந்து பொட்டிட்டு கண்பறிக்கும் அழகாலே செந்நிர இதழ்மீது கருந்துளி மச்சத்தில் காளையரை மயக்குகின்ற கச்சிதமான அழகாலே செவ்விதழ் இதழிணைத்து தித்திக்கும் மொழிப்பேசி தேன்சொட்டும் சுவையினில் தேவதையின் அழகாலே வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாளே வான்மகள் நிலவாக ஔிர்ந்தேதான் நின்றாளே உச்சரிக்க வார்த்தையின்றி உதட்டினை கட்டிப்போட்டு ஊர்மெச்சும் அழகோட உருவாகி வந்தாளே பேரழகு யாதென்று அறியாதோர் அறிந்திடத்தான் பிரம்மனோட பிறப்பையும் எஞ்சியே எழில்கொண்டாளே தோகைமயில் அழகினையும் Read more

யாளி – 4

யாளிகள் பற்றி 2010 ல் தணிகை குமார், மணி எழுதிய நாவல் பலதரப்பிடம் இருந்து நன்மதிப்பைப் பெற்றது. யாளி மிருகத்தை தேடி செல்லும் இளைஞர்கள் பற்றி சுவரசியமாக பல செய்திகளுடன் வெளியடப்பட்டது. யாளி பற்றிய பலருக்கு அறிமுகமும், இதுபோல் ஏன்..? இதுவரை எழுதவில்லை… ஆங்கில படங்களுக்கு நிகராக ஒரு புனைக் கதையை நம்மால் ஏன்..? உருவாக்க முடியவில்லை… என, கேள்வி கேட்டது அந்த புத்தகம். அந்த புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு Read more

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும் சித்திரமாய் இருந்திடாமல் உழைக்கின்ற மானிடரே ! உலகத்தின் ஆணிவேரே ! களைப்படையா உழைப்பாலே காலமுழுதும் நிலைப்போரே ! பிழைப்பதற்கு இவ்வழிபோல் பிறிதொன்று இல்லையே ! உச்சிவேளை தகித்தாலும் உணர்த்தும்பசி போக்கிடவே கச்சிதமாய் பணிமுடிக்கும் கல்மனதுக் காரர்களே ! மெச்சிடவே பலருமிங்கே மெய்வார்த்தைக் கூறிடுவர் , தச்சுத்தொழில் செய்தாலும் தவறில்லைத் தரணியிலே , காகிதமே பொறுக்கினாலும் கட்டாயம் அதுதொழிலே , ஆயுதங்கள் செய்தாலும் அத்தனையும் தொழில்தான் , தாகமெனத் Read more

யாளி – 2

 யாளியை வியாழம், சரபம் என்றும் அழைக்கிறார்கள். இது, அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும். யாழிகளின் வகைகள்:- ••••••••••••••••••••••••••••••••• சிம்ம யாளி மகர யாளி கஜ யாளி ஞமலியாளி பெரு யாளி என யாழிகளின் வகைகள் இருக்கின்றதாம்..! யாளியில் மிகவும் பலம் வாய்ந்தது கஜயாளியும், சிம்மயாளியும் தான்..! இதை கண்டால், அனைத்து விலங்குகளும் நடுங்கும் டைனோசர் உட்பட… இவைதான் டைனோசர் கால காட்டின் ராஜாக்கள். ஒரு Read more

யாளி – 1

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். நம்மில் எத்தனை பேருக்கு, யாளி(யாழி) என்றால் என்னவென்று தெரியும்..? யாளிகள்:~ ~~~~~~~~ தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற Read more

காதல்

பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு! காதலர் தினம் கொண்டாடப்படுதல் அவசியமா? என்ற கேள்வியுடன் பல நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார்கள். வியாபார நோக்கத்துடன் காதலர் தினத்தை விலையுயர்ந்த ஒரு விழாவாக மாற்றிவிடுகின்றார்கள் என்றும் இவ்விழா கலாசாரத்தை சீர்குலைக்கின்றது என்றும் பலவாறான எதிர்ப்புகள் நிலவுகின்றன. இந்நிலையில் காதலர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி சிறிது மனம் பதிப்போம். காதல் என்பது உலகத்து உயிர்கள் அத்தனையையும் தன் பிடிக்குள் Read more

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு முறுவலுடன் ஆடும் உறிமாலை, பொன்னகை பூட்டி அலங்காரம் புன்னகை சிந்தும் உற்சவரும், மின்னிடும் விளக்குகள் சொலிக்க வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி, சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா? உருண்டிடும் சக்கரம் சுழல உருவிலே சிறிய தொன்று, உரமதாய் உன்னைத் தாங்க ஊரெல்லாம் சுற்றி வருவீரே! பெற்றவர் அச்சினில் ஆணி பெருந்தேர் மக்களெனப் போற்ற, உற்சவர் என்றவர் குறிக்கோள் ஊர்வலம் சுற்றிடக் கண்டீர்! அழகினுக் Read more

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி, வண்ண மயில்கள் ஆடுது; வாலிபத்துச் சோலையிலே, வந்து நின்று ஆடுது; வளைக்கரங்கள் கோர்த்திங்கு, வட்டம் சுற்றி ஆடுது; கிறுகிறுத்துப் போகும் தலை, சிரி… சிரித்தே மகிழுது. ஆலவட்டம் போலச் சுற்றி, அகமகிழ்ந்தே ஆடுது; ஆடும் குடை ராட்டினமாய், அழகு ஊஞ்சல் ஆடுது; ஆடிப்பாடு பெண்ணே இது, அகம் மகிழும் காலமே, அடுத்து பல பொறுப்பு வரும், அது வரையில் ஆடிடு.

தடம்புரளும் நாக்கு

எண்சாண் உடம்பு வைத்து, எலும்பு தோல் ஆடை போர்த்தி, வஞ்சத்தை இதயமாக்கி, படைத்தானே இறைவன் அவன். நித்தம் தடம்புரளும் நாக்கினிலே, நரம்பு வைத்தான் எலும்பில்லை, எலும்பைஎண்ணி வைத்து, பிறர் பேச்சுப் பேசினாலே, நொறுங்கிப் போகும் முறைகளை ஏன் படைக்கவில்லை? வரம்புகள் மீறி விட்டோம் – மன வக்கிரங்கள் சேர்த்து விட்டோம், ஆறடி நிலத்திலே; அவனி வாழ்க்கை முடியும் முன், ஆயிரம் பொய்கள், அவசரக் கோலங்கள்.